பொள்ளாச்சி, மே 16- பொள்ளாச்சி பாரதியார் பல்கலைக்கழக அறிவியல் மற்றும் கலைக்கல்லூரியில் காலியாக. உள்ள இளங்கலை பிஎஸ்சி (கணிதம்) பாடப்பிரிவிற்கு மாணவ மாணவிகள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி மகாலிங்கபுரத்திலுள்ள சமத்தூர் இராம.ஐயங்கார் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பாரதியார் பல்கலைக் கழகத்தின் கலை மற்றும் அறிவியல் உறுப்புக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இதில் 2019 - 20 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு மூன்று கட்டங்களாக கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற்றது. இப்பணிகள் புதன்கிழமையுடன் நிறைவு பெற்ற நிலையில் இளங்கலை பாடப்பிரிவான பிஎஸ்சி (கணிதம்) பாடப்பிரிவில் 28 காலியிடங்கள் உள்ளது. இட ஒதுக்கீடு அடிப்படையில் இக்காலியிடங்கள் நிரப்பப்படும் என கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.எனவே, கலந்தாய்வில் கலந்துகொள்ளாத மற்றும்விருப்பமுள்ள மாணவ, மாணவிகள் இப்பாடப்பிரிவிற்கான புதிய விண்ணப்பங்களை கல்லூரி அலுவலகத்தில் பெற்று பூர்த்தி செய்து வருகின்ற மே 24 ம் தேதி வரை அளிக்கலாம். இதற்கான கலந்தாய்வு இம்மாதம் மே 27 ஆம் தேதி காலை கல்லூரியில் நடைபெற உள்ளதாக கல்லூரி முதல்வர் (பொ) கிருஷ்ணராஜ் கூறியுள்ளார்.