திருப்பூர், செப். 16 – திருப்பூரின் பல்வேறு பகுதிகளில் கேபிள் டிவி வயர்களை துண்டிக்கும் நடவடிக்கையை நிறுத்து மாறு கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் மாவட்ட ஆட்சி யரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். திங்களன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: அரசு கேபிள் டிவி சங்கப் பிரதிநிதிகளை அழைத்துப் பேச்சு வார்த்தை நடத்தி, தொழில் நடத்தப் போதுமான, நியா யமான கட்டணத்தை அறிவிக்க வேண்டும். மத்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அறி வித்தபடி ஆப்ரேட்டர்களுக்கு ஓர் இணைப்புக்கு ரூ.130 கிடைக்கும் வகையில் மற்ற மாநிலங்களில் அமுலில் உள்ளதைப் போல் தமிழகத்திலும் ஏற் படுத்த வேண்டும். கடந்த ஒரு மாத காலமாக தமிழக அரசின் கேபிள் டிவி கார்ப்பரேஷன் எடுத்து வரும் நடவடிக்கை களால் கேபிள் டிவிஆபரேட்டர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படுகிறது. வீதிகளில் கொண்டு செல் லப்படுகின்ற கேபிள் ஒயர்களுக்கான தள வாடகை எவ்வளவு என்று இதுவரை அறிவிக்கப்படாத நிலை யில் கேபிள் வயர்களைத் துண்டிப்பதால் மாநக ரில் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் உள்ள லட்சக் கணக்கான மக்களின் பொழுது போக்கு கேபிள் டிவி ஒளிபரப்பு சேவை தடைபடுகிறது. இதனால் மக்கள் அரசின் மீது கடும் அதிருப்திக்கு ஆளாகின்றனர். கேபிள் டிவி வயர்களை கொண்டு செல்வதற்கான தள வாடகை நிர்ணயிக்கப்படுமாயின் அதனை குறிப் பிட்ட காலகெடுவுக்குள் செலுத்த அனைத்து ஆபரேட் டர்களும் தயாராக உள்ளோம். அதுவரை கேபிள் துண் டிப்பு நடவடிக்கைகளை எடுக்காமல் இருக்க வேண்டு மென கேபிள் ஆப்ரேட்டர்கள் கேட்டுக் கொண்டுள் ளனர். அத்துடன் புதிய உள்ளூர் கேபிள் ஆபரேட்டர் டர்களை நியமிக்கும் நடவடிக்கையால் சுமூக உறவு பாதிக்கிறது. அதையும் நிறுத்த வேண்டும் என்று கேபிள் ஆபரேட்டர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.