தமிழக சட்டமன்ற சபாநாயகர் பி.தனபால் பேச்சு
கோவை, நவ.20- கோவையில் இருந்து மைசூர் வரை ரூ.1,500 கோடி செலவில் மாநில அரசே பைபாஸ் சாலை அமைக்கும் திட்டத்தை செயல் படுத்த உள்ளதாக தமிழக சட்ட மன்ற சபாநாயகர் பி.தனபால் தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம், மேட்டுப் பாளையம் அருகே உள்ள அன் னூரில் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்ப்பு கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. கோவை மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்ச்சியில் அவிநாசி சட்டமன்ற உறுப்பினரும், சட்டமன்ற தலைவ ருமான பி.தனபால் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதன்பின் அவர் பேசுகையில், கோவை சத்தியமங்கலம் சாலை அன்னூர் வழியே செல்லும் போது, சரவணம்பட்டி முதல் சத்தியமங் கலம் வரை கடுமையான போக்கு வரத்து நெரிசல் ஏற்படுவதால் வாகனங்கள் பல மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள் ளது. எனவே, பொதுமக்களின் சிரமத்தைத் தவிர்க்க கோவை சரவணம்பட்டி முதல் மைசூர் வரை சுமார் ரூ.1,500 கோடி மதிப்பீட் டில் பைபாஸ் சாலை அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. முழுக்க முழுக்க தமிழக அரசின் மூலம் இத்திட்டம் தயாரிக்கப்பட்டு நபார்டு வங்கி உதவியுடன் நிறை வேற்ற உள்ளது. மேலும், அன்னூர் மற்றும் அவிநாசி பகுதிகளில் உள்ள ஊராட்சி பகுதிகளுக்கு தடையின்றி குடிநீர் விநியோகம் செய்யத் திட் டங்கள் உருவாக்கப்பட்டு வருகி றது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.