tamilnadu

img

வாரச்சந்தையில் தீப்பிடித்து எரிந்த சரக்கு வாகனம்

அவிநாசி, நவ. 8- அவிநாசி அருகே கருவலூரில் வாரச்சந்தையில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு வாகனம் திடீரென தீப்பற் றிய எரிந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட் டது. அவிநாசி ஒன்றியம், கருவலூர் ஊராட்சிக்குட் பட்ட மாரியம்மன் கோயில் பின்புறம் வெள்ளிக் கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெற்று வருகி றது. இச்சந்தையில் அவிநாசி சுற்றுவட்டார பகு தியில் இருந்து வரும் விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொள்வர். இந்நிலையில், இந்த வாரம் கூடிய சந்தையில் பருப்பு வகைகள், தின்பண்டங்கள் உள்ளிட்டவைகளை ஏற்றி வந்த சீனிவாசன் என்ற வியாபாரியின் சரக்கு வாகனம் ஒன்று திடீரென்று தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதைக்கண்ட வியாபாரிகள், பொதுமக்கள் தண்ணீர் ஊற்றி தீயினை அணைத்தனர். இதனால் வாரச்சந்தையில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.