tamilnadu

img

திருப்பூர், பல்லடத்தில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தொலைபேசி சேவைகளை அவுட்சோர்ஸ் செய்வதா?

திருப்பூர், பிப். 6 – பெரிய தொலைபேசி நிலைய சேவைகளை அவுட்சோர்ஸ் எனப்ப டும் வெளி பணியாட்களுக்கு வழங்குவ தைக் கண்டித்து திருப்பூர், பல்லடத்தில் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தி னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் பிஎஸ்என்எல் மெயின் தொலைபேசி நிலையம் முன்பாக வியாழனன்று நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு சங்கத்தின் மாவட்ட நிர் வாகிகளில் ஒருவரான என்.ராமசாமி தலைமை வகித்தார். இதில் வால் பாறை டென்யூர் என்ற பெயரில் தேவையற்ற இடமாறுதல் செய்வ தையும், தன்னிச்சையாக இடமாறு தல் செய்வதையும் கைவிட வேண் டும், ஒப்பந்த ஊழியர்கள் பிரச்சனை யில் பிஎஸ்என்எல் நிர்வாகம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண் டும். முக்கிய சேவைகளை, பெரிய தொலைபேசி நிலையங்களில் அவுட் சோர்ஸ் என அயல்பணியாளர்களுக்கு வழங்குவதைக் கைவிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி யும், தொழிற்சங்கத்தை அழைத்துப் பேச வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. போராட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலை வர் ஏ.முகமது ஜாபர், மாநில உதவிச் செயலாளர் எஸ்.சுப்பிரணியம் ஆகி யோர் உரையாற்றினர். இதில் பெருந் திரளானோர் கலந்து கொண்டனர். அதேபோல் பல்லடம் பிஎஸ்என் எல் கிளை அலுவலகம் முன்பாகவும் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தினர் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.