பொள்ளாச்சி, மே 18- அவுட்சோர்சிங் ஒப்பந் தத்தை அமல்படுத்துவதைக் கண்டித்து பிஎஸ்என்எல் ஒப் பந்த தொழிலாளர்கள் மற்றும் ஊழியர் சங்கத்தினர் கருப்புக் கொடியேந்தி கண்டன ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். பொதுத்துறை தொலைத் தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்தில் அவுட்சோர்சிங் ஒப்பந்தத்தை அமல்படுத்துவதைக் கண்டித் தும், ஒப்பந்த தொழிலாளர் கள் எண்ணிக்கையினை குறைப்பதை கைவிட வேண் டும். நிலுவை ஊதியத்தொ கையினை உடனடியாக வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு தொலைத்தொடர்பு துறை ஒப்பந்த ஊழியர்கள் சங்கம் மற்றும் பிஎஸ்என்எல் ஊழி யர் சங்கத்தினர் கருப்புக் கொடியேந்தி நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் ஒருபகுதியாக, கோவை பொள்ளாச்சி யிலுள்ள பிஎஸ்என்எல் அலுவலக வளாகத்தில் திங்க ளன்று நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு ஒப்பந்த ஊழி யர் சங்கத்தின் கோவை மாவட்டப்பொறுப்பாளர் அண்ணாதுரை தலைமை வகித்தார். பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத் தின் வட்டக்கிளை செயலாளர் ஆர்.பிர பாகரன், ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் கிளை செயலாளர் ராமச்சந்திரன் ஆகியோர் கோரிக்கையை விளக்கிப் பேசினர். இதில் கருப்புக் கொடியேந்தி திரளானோர் கலந்து கொண்டனர்.
சேலம்
சேலத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் கே. ராஜன் தலைமை வகித்தார். இதில் பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் கோபால், ஒப்பந்த தொழிலாளர் சங்க செயலாளர் செல்வம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நீலகிரி
குன்னூரில் உள்ள பிஎஸ்என்எல் அலுவ லகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் ஜெ. பிரின்ஸ் மற்றும் ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் கிளைத் தலை வர் லியோ கிறிஸ்டோபர் ஆகியோர் தலைமை வகித்தனர். பிஎஸ்என்எல் ஊழி யர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர். ஜேக்கப் மோரீஸ், ஒப்பந்த ஊழியர் சங் கத்தின் மாவட்டத் தலைவர் எஸ். கென்னடி, அலுவலக கிளைச் செயலாளர் கே,ஆர். ரவி, ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் கிளைச் செயலா ளர் மனோஜ் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இப்போராட்டத்தில் ஒப்பந்த ஊழியர்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர். உதகையில் உள்ள பிஎஸ்என்எல் அலுவ லகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு தமிழ்நாடு ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தின் கிளைத் தலைவர் கே. தங்க வேல் தலைமை வகித்தார்.
மாவட்டச் செய லாளர் பி. விஜயகுமரன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் வி. மகேஷ்வரன் வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்வில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் 20 -க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியு றுத்தி முழக்கங்களை எழுப்பினர். இதேபோல் கூடலூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒப்பந்த ஊழியர் சங்கத் தின் கிளைத் தலைவர் கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார். பிஎஸ்என்எல் ஊழி யர் சங்கத்தின் கிளைச் செயலாளர் அருள் செல்வன், ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் கிளைச் செயலாளர் சிவகுமார் மற்றும் ஐ. ரவி குமார் ஆகியோர் கோரிக்கைகளை விளக் கிப் பேசினார். கோத்தகிரியில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் கிளைச் செயலாளர் சுபீர் தலைமை தாங்கி னார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒப்பந்த ஊழி யர்களும் நிரந்தர ஊழியர்களும் தனிமனித இடைவெளியுடன் திரளாக கலந்து கொண் டனர்.