tamilnadu

img

பிஎஸ்என்எல் ஊழியர் சங்க சிறப்பு கருத்தரங்கம்

கோவை, அக்.16– பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத் தின் சார்பில் கோவை தலைமை அலுவலகத்தில் புதனன்று சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.  பொதுத்துறை பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் பங் கேற்ற தொழிற்சங்க அங்கீகார தேர் தலில் ஏழாவது முறையாக பிஎஸ் என்எல்இயு அமோக வெற்றியை பெற்றுள்ளது. இதனை கொண்டா டும் விதமாகவும், கார்ப்ரேட் நலனுக் காக பிஎஸ்என்எல் நிறுவனத்தை முடக்கும் மத்திய அரசை கண்டித் தும், ஒப்பந்த ஊழியர்களுக்கு நிலுவை ஊதியம், 4ஜி அலைக் கற்றை சேவை உள்ளிட்ட கோரிக் கைகளை முன்வைத்து நடைபெற உள்ள உண்ணாவிரத போராட் டத்தை வெற்றிகரமாக்க ஊழியர் களை தயார் செய்யும் விதமாகவும் பிஎஸ்என்எல்இயு சார்பில் கோவை மெயின் தலைமை அலுவலக கூட் டரங்கில் சிறப்பு கருத்தரங்கம் நடை பெற்றது. இக்கருத்தரங்கத்திற்கு மாவட்ட தலைவர் ஏ.முகமதுஜாபர் தலைமை தாங்கினார். மாவட்ட செயலா ளர் சி.ராஜேந்திரன் வரவேற்புரை யாற்றினார். கருத்தரங்கில் பொதுச் செயலாளர் எஸ்.செல்லப்பா, தலைவர் ஏ.பாபுராதாகிருஷ்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். முடிவில் மாவட்ட பொருளாளர் எஸ்.மகேஷ்வரன் நன்றி கூறினார். கருத்தரங்கில் ஏராளமானோர் பங்கேற்றனர்.