tamilnadu

img

ஆட்குறைப்பு நடவடிக்கைகளை கண்டித்து பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ஈரோடு, நவ.1- ஈரோடு மாவட்ட பிஎஸ்என்எல் நிர்வா கத்தின் ஆட்குறைப்பு நடவடிக்கையை கண்டித்து பிஎஸ்என்எல் ஊழியர் சங்கங் களின் கூட்டமைப்பு சார்பில் ஈரோட்டில் வியாழனன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஈரோடு முதன்மை பொது மேலாளர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த  ஆர்ப்பாட்டத்திற்கு பிஎஸ்என்எல் ஊழியர்  சங்கத்தின் மாவட்ட உதவி தலைவர் ஆர். தம்பிகலையான், தமிழ்நாடு தொலைத் தொடர்பு ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் எம்.சையத் இத்ரீஸ் ஆகியோர் தலைமை வகித்தனர். ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கே.பழனிசாமி வரவேற்றார். பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் மாநில உதவி செயலர் வி. மணியன் கோரிக்கைகளை விளக்கி பேசி னார். பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்கத் தின் மாநில உதவி செயலாளர் எல்.பரமேஸ்வரன், பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சி.மணி உட்பட பலர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு, பிஎஸ்என்எல் பொது மேலாளருடன் நடை பெற்ற பேச்சுவார்த்தையில் ஆட்குறைப்பு உத்திரவை நிறுத்தி வைக்க பிஎஸ்என்எல் நிர்வாகம் ஒப்புக்கொண்டுள்ளது. 

;