tamilnadu

img

மருத்துவ கழிவுகளால் அசுத்தப்படும் செங்குளம்

கோவை, ஜூலை 13– செங்குளத்தில் கடந்த சில தினங் களாக மர்ம நபர்கள் மருத்துவக் கழி வுகளை கொட்டிச் செல்லும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  கோவை குனியமுத்தூர் பகுதி ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் உள்ள பகுதியாகும். இப்பகுதியின் நீராதரங்களில் ஒன்றாக செங்குளம் உள்ளது. இக்குளம் நிரம்பினால் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயரும். இந்நிலையில் இதன் நீர்வழிப்பாதை முழுவதும் அடைபட்டும், குளத்தினுள் பல்வேறு  கழிவுகளைக் கொட்டியும் குளத்தை சீரழித்து வைத்திருந்தனர். இதனைய டுத்து சமூக ஆர்வலர்கள், பொதுமக் கள் ஒன்றிணைந்து கடந்த சில மாதங் களுக்கு முன்பு சுத்தம் செய்தனர். இதனால் செங்குளம் பழைய நிலைக்கு  வந்தது.  இந்நிலையில் வீட்டு வசதி வாரி யம் செங்குளத்தின் அருகாமை யில் அடுக்குமாடி வீடுகள் கட்டத் துவங்கியது. இதனையடுத்து கட்டுமானத்திற்கு தேவையான பொருட்களை லாரிகள் மற்றும் வாக னத்தில் கொண்டு செல்ல குளத்தின் நடுவே புதிய சாலை அமைத்தது பெரும் சர்ச்சையை உருவாக்கியது. அமைச்சரின் ஆசியோடு நடை பெற்றது என்கிற குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இது தற்காலிக சாலை தான், நிரந்திர சாலையல்ல என்று மாநகராட்சி அறிவிப்பு பலகை வைத்து சமாளித்தது.  தற்போது பருவமழை துவங்கி உள்ள நிலையில், நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து குறிச்சி குளம், குனியமுத்தூர் செங்குளம், உக்கடம் குளம் என நீர்நிலைகளில் நீர் வர துவங்கி உள்ளது.  இந்நிலையில், குனியமுத்தூர் செங்குளத்தில் கடந்த சில தினங்க ளாக காலாவதியான மருந்துகள், பஞ்சு, ஊசிகள் போன்ற மருத்துவக் கழிவுகளை மர்ம நபர்கள் கொட்டிச் செல்வது அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. இந்நிலையில் இக் குளத்தை தூர்வாரிய சமூக ஆர்வ லர்கள், கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும். கழிவுகள் கொட்டிச் செல்லும் நபர்களைக் கண்டறிந்து  உரிய நடவடிக்கை மேற்கொள்ள  வேண்டும். தொடர்ந்து இக்குளத் தைக் கண்காணிக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.