tamilnadu

img

நீரோடையில் கொட்டப்படும் மதுக்கூட கழிவுகள்

அவிநாசி, செப். 3- அவிநாசி அருகே நீரோடையில் கொட்டப்படும் டாஸ்மாக் மதுக்கூட கழிவுகளால் சுற்றுச்சூழல் மாச டைந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவிநாசி கால்நடை மருத்துவமனை அருகில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இக்கடையில் மது பான விற்பனையுடன் பார் செயல்பட்டு வருகின்றது. இங்கு மது அருந்த வருபவர்கள் டம்ளர், உணவுக்கு பயன்படுத்த கூடிய பேப்பர் தட்டுகள்,  பிளாஸ்டிக் கவர்களில் அடைத்து வரும் தின்பண்டங்கள்  உள்ளிட்டவைகளை பயன்படுத்துகின்றனர். இந்த மதுக்கூடத்தில் பயன்படுத்தி வீசியெறிப்பட்ட கழிவு களை கோவை  செல்லும் சாலையில் உள்ள நீரோடை யில் மதுக்கூட ஊழியர்கள் கொட்டி செல்கின்றனர். இதனால் மழை காலங்களில் நீரோடையில் அடைப்பு ஏற்படுகின்றது, அதுமட்டுமின்றி அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் சுற்றுச்சூழல் மாசடைந்து வருகிறது.  எனவே, நீரோடையில் டாஸ்மாக் கழிவுகளை கொட்டிய மதுக்கூட ஊழியர்கள், உரிமையாளர் மீது நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்க வேண்டும். இங்கு கொட்டப்பட்டுள்ள டாஸ்மாக் கழிவுகளை உட னடியாக அப்புறப்படுத்தி நீரோடைகளைப் பாது காக்க பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்து உள்ளது.