tamilnadu

தபால் நிலைய பூட்டை உடைத்து பணம் கொள்ளை

கோவை, ஜூன் 22- கோவையில், தபால் நிலைய பூட்டை உடைத்து மர்மநபர்கள் பணத்தை கொள்ளையடித்து சென் றுள்ளனர். இதுகுறித்து காவல் துறையினர் வழக் குப்பதிவு செய்து விசா ரணை மேற்கொண்டு வரு கின்றனர். கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் அருகில் உள்ள தேவராயபுரம் தபால் நிலையத்தில் பூட்டை உடைத்து ரூ.5 ஆயிரத்து 35 பணம் மற்றும் பென் டிரைவ் களை மர்ம நபர்கள் திருடி சென்று உள்ளனர். இது குறித்து, தெற்கு தபால் ஆய் வாளர் பழனி காவல் நிலை யத்தில் புகார் அளித்தார். அப்புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை பிடிக்க தீவிர நடவடிக்கை கள் எடுத்து வருகின்றனர்.

;