tamilnadu

img

மாற்றுத்திறனாளிகளுக்கான பிரெய்லி முறை கைபேசி வழங்கும் விழா

சேலம், செப். 26- பார்வையற்றோருக்கு பிரெய்லி முறை கைபேசி வழங்கும் விழா சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழனன்று நடைபெற்றது. மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவி வழங்கும் விழா சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் நடைபெற்றது.  இதில் பார்வைத்திறன் குறை பாடு கொண்ட 100 மாற்றுத்திறனாளிகளுக்கு பிரெய்லி முறையில் பயன்படுத்தப்படும் கைபேசி வழங்கப்பட்டது. இந்நிகழ்வில், சேலம் மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் கலந்து கொண்டு கைபேசி மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் மடக்கு குச்சி, செவித்திறன் கேட்பு இயந்திரம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந் நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட மாற்றுத்திறனாளி நல  அலுவலர் சுப்பிரமணி உள்ளிட்ட அரசுத்துறை அலுவ லர்கள் கலந்து கொண்டனர்.

;