ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் அபாயம்
தொழில்துறையில் தொடரும் மந்த நிலையால், குறு, சிறு, நடுத்தர நிறுவனங் களைத் தொடர்ந்து பெரு நிறுவனங்களும் உற்பத்தி நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறது. இதன்ஒருபகுதியாக கோவையின்அடை யாளமாய், பல்லாயிரக்கனக்கானோருக்கு வேலை வாய்ப்பை வழங்கி வரும் எல்எம் டபுள்யு, பிரிக்கால், ரூட்ஸ், டெக்ஸ்மோ உள் ளிட்ட பல்வேறு பெரு நிறுவனங்கள் நெருக் கடியை எதிர்கொள்ள வழியில்லாமல் உற் பத்தி நிறுத்த நடவடிக்கையில் ஈடுபட்டு வரு கின்றனர்.இதனால் இவற்றில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் எதிர்காலம் கேள் விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. கோவை மண்டலத்தில் லட்சத்துக்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட ஆட்டோ மொபைல் நிறுவனங்கள், ஜவுளித் தொழில், பம்ப்செட், மோட்டார்கள், கிரைண்டர், பவுண்டரி, வால்வு தயாரிக்கும் தொழிற் சாலைகள் உள்ளன. பெரிய நிறுவனங் களுக்கு உதிரிபாகங்களைத் தயாரிக்கவும், அந்நிறுவனங்களுக்கு ஜாப் ஆர்டர்களை செய்து கொடுக்கவும் சுமார் 40 ஆயி ரத்துக்கும் மேற்பட்ட குறு, சிறு, நடுத்தர நிறு வனங்கள் செயல்பட்டு வருகின்றன. மாவட் டத்தில் உள்ள மொத்த குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களில் சுமார் 30 சதவிகிதம் வரை ஆட்டோமொபைல் துறையை மட்டுமே நம்பி யுள்ளன.
இந்நிலையில் மத்திய அரசின் பணமதிப் பிழப்பு நடவடிக்கையால் சிறு, குறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப் பட்டது. மீண்டு வந்துவிட முடியும் என்கிற நம்பிக்கையோடு இருந்த இந்நிறுவனங் களுக்கு மேலும் பேரிடியாக ஜிஎஸ்டி வரி விதிப்பு நெருக்கடியின் உச்சத்திற்கு கொண்டு சென்றன. இப்போது சிறுகுறு தொழில்கள் மட்டுமல்லாமல் பெரு நிறுவனங்களும் நெருக்கடியை எதிர்கொள்ள முடியாமல் தவித்து வருகின்றன. இதுவும் மத்திய அர சின் நிர்வாகத்திறனின்மையால் ஏற்பட் டுள்ள நெருக்கடியாகும். ஏற்கனவே ஜிஎஸ்டி வரிவிதிப்பில் தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், எவ்வித முன்யோசனையுமின்றி அதிரடியாக மத்திய அரசு 2020 ஆம் ஆண்டு முதல் பி.எஸ். 6 விதிமுறைகளுக்கு உட்பட்டு தயா ரிக்கப்படும் வாகனங்கள் மட்டுமே சந்தை களில் விற்பனைக்கு வரும் என்று அறி வித்தது. இந்த அறிவிப்பினால் வாகனங் களை வாங்குவதற்கான கடன் கொடுப்பது குறைந்தது, இதுபோக வாகன காப்பீடுத் தொகை உயர்வு, வாகனங்கள் மீதான கடந்த ஓராண்டாக மோட்டார் வாகனத் துறை நெருக்கடியில் சிக்கியது.
இதைப்போலவே பவுண்டரிகள், ஜவுளித் தொழில் இயந்திரங்கள், பம்ப்செட் உள் ளிட்ட பல்வேறு குறு, சிறு தொழில் நிறுவனங் களுக்கும் ஜாப் ஆர்டர்கள் வெகுவாக குறைந்த நிலையில் ஏராளமான குறுந் தொழில் கூடங்கள் மூடப்பட்டுவிட்டன. மேலும், சிறு, நடுத்தர நிறுவனங்களில் பெரு மளவிலானவை உற்பத்திக் குறைப்பில் ஈடு பட்டுள்ளன. ஏராளமான தொழிலாளர்கள் வேலையிழந்துள்ள நிலையில், சிறு, நடுத்தர நிறுவனங்களைத் தொடர்ந்து தற்போது பெரிய நிறுவனங்களும் உற்பத்திக் குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட முடிவு செய்துள் ளன. கோவையில் 10க்கும் மேற்பட்ட இடங் களில் ஆலைகளைக் கொண்டு செயல்பட்டு வரும் பிரிக்கால் ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனம், ஏற்கெ னவே உற்பத்தி நிறுத்தத்தில் ஈடுபட தொடங் கிவிட்டது. அதன்படி வாரம்தோறும் சனிக் கிழமைகளில் அந்நிறுவன ஊழியர்களுக்கு பாதி ஊதியத்துடன் கட்டாய விடுப்பு அளிக் கப்பட்டது. இதுவும் போதாதென்று யூனிட் யூனிட்டாக விடுமுறையை அளித்தும், அரசு விடுமுறையையொட்டி அதற்கு முன்பு ஒரு நாளும், பின்பு ஒரு நாளும் என தொடர் விடுமுறையை அறிவித்து சமாளித்து வரு கிறது. இதைப்போலவே எல்எம்டபுள்யு நிறு வனங்களும் வாரத்துக்கு 2 நாள் உற்பத்தி நிறுத்தம், கட்டாய விடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. ஜவுளி இயந்திரங்கள் தயாரிக்கும் நிறுவனம், வால்வுகள் தயாரிக் கும் நிறுவனங்கள் சிலவும் உற்பத்தி நிறுத் தத்தைத் தொடங்கியுள்ளன.
இதுகுறித்து கோவையைச் சேர்ந்த ஆட் டோமொபைல் உதிரி பாக தயாரிப்பு நிறுவ னத்தின் உயர் அதிகாரி கூறுகையில், ‘ஆட் டோமொபைல் நிறுவனங்கள், தாங்கள் கேட் கும்போது உதிரி பாகங்களை தயா ரித்துக் கொடுத்தால்போதும் என்று தெரிவித் துவிட்டதால், பொருள்களை உற்பத்தி செய்து இருப்பு வைத்திருக்கத் தேவை யில்லாத நிலை உருவாகியுள்ளது. இத னால் வருவாய் இழப்பை குறைக்கும் நடவ டிக்கையாக வாரம் ஒரு நாள் அல்லது இரண்டு நாள் உற்பத்தி நிறுத்தத்தில் ஈடுபட நாங்கள் முடிவு செய்து தொழிலாளர்களுக்கு லே-ஆப் விடுகிறோம். இந்த நிலை சீரடைய மேலும் இரண்டு ஆண்டுகளாகும். ஆரம்பத்தில் சிறு, குறு,நடுத்தர தொழில் நிறுவனங்களைத் தாக்கிய நெருக்கடியான நிலை இப்போது பெரிய நிறுவனங்களையும் பெரிய அள வில் பாதிக்கத் தொடங்கியிருப்பது கவலைக் குரிய விஷயம் என்கிறார். இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) கோவை மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ் ணமூர்த்தி கூறுகையில், கோவை மாவட் டத்தில் பஞ்சாலைகளுக்குத் தேவையான உதிரி பாகங்கள், இயந்திரங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள், மோட்டார் பம்ப்செட், வால்வுகள், பவுண்டரிகள் தயாரிக்கும் தொழிற்சாலைகளும் போதுமான அளவுக்கு ஆர்டர்கள் இல்லாமல் நெருக்கடியை எதிர் கொண்டு வருகின்றன. இந்நிலையில் ஆட் டோமொபைல் உதிரிபாகங்கள் தயாரிக் கும் தொழிற்சாலைகள் முன்னெப்போதைக் காட்டிலும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. பல தொழிற்சாலைகள் வாரத்தில் 3 அல்லது 4 நாள்களுக்கு மட்டுமே இயங்கு கின்றன. தொழிலாளர்களுக்கு அவர்கள் ஏற் கெனவே பெற்று வந்த ஊதியத்தில் சுமார் 30 சதவிகிதம் குறைந்துள்ளது. இதன்கார ணமாக அத்தியாவசிய தேவைக்காக மட்டும் செலவு செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. செல வுகளை குறைத்துக்கொண்டு தொழிலா ளர்கள் வாழ்க்கையை நகர்த்தும் நிலையால் சந்தையில் வியாபாரம் முற்றி லும் முடங்கிப் போய் இருக்கிறது. பண சுழற்சி முடக்கத்தால் அனைத்தும் ஸ்தம் பிக்கிற நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே சிறு,குறு, நடுத்தர நிறுவனங் களில் பணியாற்றி வந்த வடமாநிலத் தொழி லாளர்கள் வேலையிழந்து தங்களது சொந்த ஊர்களுக்கே திரும்பி சென்ற நிலையில், தற் போது பெரு நிறுவனங்களில் நிரந்தரப் பணியில் உள்ள தொழிலாளர்கள் மருத்து வம், கல்வி உள்ளிட்ட செலவுகளை எதிர் கொள்ள வழியில்லாமல் கடுமையான பொரு ளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வரு கின்றனர்.
கோவையில் பல ஆண்டுகளாக ஒரே நிறுவனத்தில் பணியாற்றி வந்த உள்ளூர் தொழிலாளர்கள் தற்போது வேறு நிறுவ னங்களில் வேலைவாய்ப்பை நாடும் நிலை உள்ளது. மேலும், தற்காலிக வேலையிழப்பு (லே-ஆஃப்), ஆள்குறைப்பு போன்ற நடவ டிக்கைகளில் ஈடுபடும்போது பெரிய நிறு வனங்கள் எதுவும் சட்ட ரீதியான நடை முறைகளை பின்பற்றுவதில்லை. இது போன்ற நடவடிக்கைகளை எடுக்கும் போது அரசின் முன் அனுமதி பெற வேண்டும்., தற்காலிக, நிரந்தர வேலை யிழப்புக்கான நஷ்ட ஈட்டுத் தொகையை வழங்க வேண்டும் என்ற சட்ட விதிகள் பின் பற்றப்படுவதில்லை. தற்காலிக வேலையி ழப்பு நடவடிக்கையை மேற்கொள்ளும்போது அதை தொழிலாளர்களின் சொந்த விடு முறையில் கழித்துக் கொள்வது, சம்பள மில்லா விடுப்பாகக் கருதி சம்பளம் கொடுக்கா மல் விடுவது போன்ற நடைமுறைகள் பின்பற் றப்படுகின்றன.
தொழில் துறையின் நிலைமை சீரடையும் வரையிலும் அந்த நிறுவனத்தையே நம்பி யிருக்கும் தொழிலாளர்களுக்கு உரிய நிவார ணம் வழங்கப்பட வேண்டும். வேலையிழப்பு ஏற்படும் நாள்களிலும் தொழிலாளர்களுக்கு முழு ஊதியம் வழங்கவும், ஆட்குறைப்பு போன்ற நடவடிக்கைகளை தொழில் நிறுவ னங்கள் தன்னிச்சையாக செயல்படுத்த தடை விதிக்கவும், தொழில் நடவடிக்கைகளுக்குத் தேவையான நிதிப் பற்றாக்குறையை சரிப்ப டுத்தி ஒரு நம்பகமான சூழலை உருவாக்கவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதைவிடுத்து சாமானியனின் நெருக்கடியை உணராமல் எல்லாம் சரியாக இருப்பதாக மத்திய அரசு சமாளிப்பது மேலும் நெருக்கடியை தீவிரப்படுத்தவே உத வும். இதனையெல்லாம் கருத்தில் கொண்டே ஜனவரி 8 ஆம்தேதி அகில இந்திய பொது வேலை நிறுத்த போராட்டத்திற்கு மத்திய தொழிற்சங்கங்கள் அறைகூவல் விடுத்துள் ளது. இந்த போராட்டம் நிச்சயம் மத்திய அர சின் மக்கள் விரோத கொள்கைகளை அம்ப லப்படுத்தும் என்றார். இதற்கிடையே, போர்க்கால அடிப் படையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள் ளப்படாவிட்டால், தொழில் நிறுவனங்கள் இயங்குவதற்குத் தேவையான திறமையான ஆட்கள் பற்றாக்குறை ஏற்படும். அதன் பிறகு, உடனடியாக தொழில் துறையின் நிலைமை சீரடைந்தாலும், தொழில் நிறுவ னங்கள் பழையபடி இயங்குவதற்கு பல நாட்களாகும் என்கிற அபாயம் உள்ள தாக தொழிற்சங்கத்தினர் வேதனை தெரிவிக் கின்றனர்.
- அ.ர.பாபு