tamilnadu

img

கட்சி கல்விக்கு அர்ப்பணிப்போடு பணியாற்றியவர் பி.ராமமூர்த்தி: நினைவஞ்சலி நிகழ்வில் புகழாரம்

திருப்பூர், செப். 22 – திருப்பூர் மாவட்டத்தில் மார்க்சிய கட்சி கல்வியை அனைவரிடமும் கொண்டு சேர்க்க அர்ப்பணிப்போடு பணியாற்றியவர் தோழர் பி.ராமமூர்த்தி என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல் புகழாரம் சூட் டினார். திருப்பூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் செயற்குழு உறுப்பினரும், வாலி பர் சங்கத்தின் முன்னாள் மாநிலப் பொருளா ளராக செயல்பட்டவருமான தோழர் பி.ராம மூர்த்தியின் 7ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு திருப்பூர் தியாகி பழனிச்சாமி நிலை யம் முன்பாக ஞாயிறன்று நடைபெற்றது. இதில் மாநில செயற்குழு உறுப்பினர் கே. தங்கவேல், மாநிலக்குழு உறுப்பினர் கே. காமராஜ், மாவட்டச் செயலாளர் செ.முத்துக் கண்ணன் உள்பட கட்சி அணியினர் திரளா னோர் பங்கேற்று பி.ராமமூர்த்தி உருவப் படத்துக்கு மலர் தூவி நினைவஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்வில் மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல் பேசுகையில், தோழர் பி.ராம மூர்த்தி சிறு வயது முதல் இயக்கத்தில் ஈடு பாட்டுடன் செயல்பட்டார். வாலிபர் சங்க நிர்வாகியாக இருந்தபோது நூலகத்தை உரு வாக்கி பராமரிப்பதிலும், கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினராக இருந்த போது மார்க்சிய தொடர் வகுப்பு மூலம் கட்சிக்  கல்வியை அனைத்து தோழர்களிடமும் கொண்டு சேர்க்கவும் அர்ப்பணிப்புடன் பணி யாற்றினார் என்று குறிப்பிட்டார்.