கோவை, நவ.12- உணவு பாதுகாப்புத்துறை மற்றும் நுகர்வோர் அமைப்புகள் சார்பில் டிரான்ஸ் கொழுப்பை குறைப்பது குறித்து கோவையில் பள்ளி மாண வர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி செவ்வா யன்று நடைபெற்றது. கொழுப்பு அமிலங்கள் நன்மை செய்பவை மற்றும் தீமை செய்பவை என்று இரு வகைகளாகப் பிரிக்கப்பட்டு உள்ளது. தீமை செய்யும் கொழுப்பு அமிலங்கள் ட்ரான்ஸ் கொழுப்புகள் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த தேவையற்ற கொழுப்பினால் இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 60 ஆயிரம் பேர் வரை உயிரிழந்து வருகின்றனர். இந்த நிலையில், டிரான்ஸ் கொழுப்பு நிறைந்த உணவு பண்டங்களை தவிர்ப்பது மற்றும் டிரான்ஸ் கொழுப்பை குறைப்பது குறித்து பொதுமக்களி டையே அரசு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவ தோடு, வரும் 2020 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை டிரான்ஸ் கொழுப்பு இல்லாத நாடாக மாற்ற வேண் டும் என்று உணவு பாதுகாப்புத்துறை இலக்கு நிர்ணயித்துள்ளது. இதனையொட்டி, உணவு பாதுகாப்புத்துறை, சிட்டிசன் கன்ஸ்யூமர் அண்ட் சிவிக் ஆக்சன் குரூப் மற்றும் கோவை சிட்டிசன் வாய்ஸ் கிளப் ஆகிய நுகர்வோர் அமைப்புகள் இணைந்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர். அவிநாசி சாலையில் உள்ள ரங்கம்மாள் பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவ லர் தமிழ்ச்செல்வன் கலந்து கொண்டு ட்ரான்ஸ் கொழுப்புகள் குறித்தும், டிரான்ஸ் கொழுப்பு உள்ள உணவுகளை தவிர்ப்பது குறித்தும், பிளாஸ்டிக் உப யோகத்தை தவிர்ப்பது குறித்தும் மாணவர் களிடையே பேசினார். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள், சிட்டிசன் கன்ஸ்யூமர் அண்ட் சிவிக் ஆக்சன் குரூப் அமைப்பை சேர்ந்த சவிதா திருநா வுக்கரசு மற்றும் கீர்த்தனா தங்கவேல், கோவை சிட்டிசன் வாய்ஸ் கிளப் அமைப்பின் நிறுவனர் ஜெயராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.