tamilnadu

img

தலைகவசம் குறித்த விழிப்புணர்வு

நாமக்கல், செப்.28- தலைகவசம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் சனி யன்று ராசிபுரத்தில் நடைபெற்றது.  நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் போக்குவரத்து காவல் பிரிவு, சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்கம் மற்றும்  ஜேசிஐ   ராசிபுரம் மெட்ரோ இணைந்து நடத்தும்  சாலை விபத்து குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் நடை பெற்றது. இந்த நிகழ்வில், இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும்  ஊர் பொது மக்களுக்கான சாலை விபத்து விழிப்புணர்வு பிரச்சாரம் ஆண்டகளூர் கேட்டில் துவங்கி ராசிபுரம் பழைய பேருந்து நிலையம், கடை வீதி, புதிய பேருந்து நிலையம் வழியாக சேந்த மங்கலம் பிரிவு சாலையில் ஊர்வலம் நிறைவு பெற்றது. முன்னதாக, விழிப்புணர்வு பிரச்சாரத்தை நாமக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அர.அருளரசு கொடியசைத்து துவக்கி வைத்தார். ராசி புரம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஆர்.விஜயராகவன் நிறைவு செய்து வைத்தார். இதில் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட  இளைஞர்கள் திரளாக  கலந்து கொண்டனர். இரு சக்கர வாகனத்தில் தலைகவசம் அணிந்து கொண்டு வாகன பிரச்சாரத்திலும் ஈடுபட்டனர். 

;