அவிநாசி, ஆக. 30- அவிநாசி அருகே கருணை பாளையத்தில் அவிநாசி கிழக்கு ரோட்டரி சங்க மகளிர் பிரிவு சார்பில் அரசு பள்ளிக் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியை கல்யாணி வரவேற்றார். மனம் மற்றும் உடல்நல ஆலோசகர் பூர்ணிமா சுவாமி, பெண் குழந்தைகள் கவனமாக, விழிப்புடன் இருக்க வேண்டியதன் அவசியம் குறித்து பேசினார். யோகா ஆசிரி யர் மணிவண்ணன், சுய ஒழுக்கம், யோகா பயிற்சியின் அடிப் படை விஷயங்களை விளக்கி கூறினார். ரோட்டரி சங்க தலைவர் சிவகுமார், ரேவதி, செல்வராணி, விஜித்ரா, அறிவு சுடர் கல்வி அறக்கட்டளை நிறுவன தலைவர் முத்துக்கும ரன் உட்பட பலர் பங்கேற்றனர். முடிவில் மகா நன்றி கூறி னார்.