முறைகேடாக குடிநீர் இணைப்பு - சிபிஎம் குற்றச்சாட்டு
அவிநாசி, மே 23- அவிநாசி அருகே திருமுருகன்பூண்டி பேரூராட்சி அலுவலகத்தில் முறைகேடாக வழங்கப்பட்டுள்ள குடி நீர் இணைப்புகளால் பலகோடி ரூபாய் பேரூராட் சிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதென மார்க்சிஸ்ட் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. இதுகுறித்து திருமுருகன்பூண்டி சிறப்புநிலை பேரூராட்சி அலுவலகத்தில் வெள்ளியன்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் எஸ். வெங்கடாசலம், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சுப்பிரமணி, பாலசுப்பிரமணி, சிஐடியு நிர்வாகி நடராஜ் ஆகியோர் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது, திருமுரு கன்பூண்டி பேரூராட்சி பகுதியில் கடந்த 2008 ஆம் ஆண்டு வரை குடிநீர் இணைப்புகள் முறையாக வழங்கப் பட்டுள்ளது. இதன்பின் பேரூராட்சிக்குட்பட்ட பகுதி களில் ஏராளமான குடியிருப்புகள் உருவாகி உள்ளன. இந்நிலையில் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சில பிர முகர்கள் முறைகேடாக சுமார் 2 ஆயிரம் குடிநீர் இணைப் புகளை கொடுத்திருப்பதாக தெரியவந்துள்ளது. இருப் பினும் ஏராளமானோர் புதிய இணைப்புகளுக்கு முறையாக விண்ணப்பித்தும் இதுவரை கிடைக்காமல் தண்ணீருக்காக அலைய வேண்டிய நிலை ஏற்பட்டுள் ளது. இவ்வாறுமுறைகேடாக கொடுக்கப்பட்டுள்ள குடிநீர் இணைப்புகளால் பல ஆண்டுகளாக பேரூராட்சிக்கு கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே, இது போன்ற முறைகேடுகளை பேரூராட்சி நிர்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும். புதிய குடிநீர் இணைப்புகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ராக்கியாபாளையம் ரோடு, ராசாத்தாள் குட்டை அருகே ரோட்டின் குறுக்கே நடைபெறும் குழாய் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு தேர்விற்கு முன் சேர்க்கை நடத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை அமைச்சர் எச்சரிக்கை
கோபி, மே 23- பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து முடிந்து, முடிவுகள் வெளியான பிறகே அனைத்து பள்ளிகளிலும் மாணவ சேர்க்கை நடைபெற வேண்டும். அதற்கு முன்பாக தனியார் பள்ளிகளில் சேர்க்கை நடைபெற்றால் அந்தப் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் செய்தியா ளர்களை சந்தித்த அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன் கூறுகையில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து முடிந்து முடி வுகள் வெளியான பிறகே அனைத்து பள் ளிகளிலும் மாணவ சேர்க்கை நடைபெற வேண்டும். அதற்கு முன்பாக தனியார் பள் ளிகளில் மாணவ சேர்க்கை நடைபெற் றாலோ, பத்தாம் வகுப்பு தேர்வுக்காக சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டாலோ, சம்பந்தப் பட்ட பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக் கப்படும் என்றார். இதேபோல், பள்ளி துவங்கும் முன்பே தனியார் பள்ளிகளில் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக தகுத்த ஆதாராத்துடன் புகார் அளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப் படும். தற்போது சென்னை, திருவள்ளூர், அரியலூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங் களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால் பணிரெண்டாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஆசிரி யர்கள் செல்ல மறுப்பதால் விடைத்தாள் கள் வேறு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட் டுள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
சொந்த ஊருக்கு நடந்தே வந்த பாய் வியாபாரி மாரடைப்பால் மரணம்
பென்னாகரம், மே 23- கேரளாவில் இருந்து சொந்த ஊரான பென்னாகரகத்திற்கு நடந்தே வந்த பாய் வியாபாரி மாரடைப்பால் உயிரிழந்த சம் பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள தொண்ணகுட்டஅள்ளி ஊராட்சி, பழையூர் அருந்ததியர் காலனி யைச் சேர்ந்தவர் ரங்கன் மகன் மகேந்திரன் (50). இவருக்கு திருமணமாகி அலமேலு என்ற மனைவியும், 4 மகள்களும், இரண்டு மகன்களும் உள்ளனர். இவர் இரண்டு மாதங்களுக்கு முன்பு கேரளாவில் பாய் வியாபாரம் செய்ய சென்றுள்ளார். இந் நிலையில் ஊரடங்கினால் தனது சொந்த ஊருக்கு செல்ல முடியாமலும், பாய் வியா பாரம் செய்ய முடியாமலும் கேரளாவில் தவித்து வந்துள்ளார். இந்நிலையில் மூன்று தினங்களுக்கு முன்பு தனது சொந்த ஊருக்கு செல்ல முடிவு செய்து வாகன வசதி இல் லாததால் நடைபயணமாக சுமார் 250 கிலோ மீட்டர் இரவு பகல் பாராமல் நெடுஞ் சாலையில் வந்துள்ளார். இதையடுத்து சரியான உணவு மற் றும் தூக்கமின்மை காரணமாக, ஈரோடு அருகே உள்ள நெடுஞ்சாலையில் வெள் ளியன்று மயக்கமடைந்து கீழே சரிந்து உள்ளார். இதை சாலையில் சென்றவர் கள் பார்த்து அவரை ஈரோடு அரசு மருத் துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால், இவர் ஏற்கனவே மாரடைப்பால் உயிரிழந்துவிட்டார் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் மகேந்திரனின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு சொந்த ஊரான பென்னா கரம் அருகே உள்ள சிடுமனஅள்ளி கிரா மத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. மகேந் திரன் இறந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.