tamilnadu

img

அவிநாசி: சொந்த செலவில் ஊர்களுக்கு புறப்பட்ட தொழிலாளர்கள்

அவிநாசி, மே 16 - அவிநாசி அருகே நியூ திருப்பூர் நேதாஜி  ஆயத்த ஆடை உற்பத்திப் பூங்காவில்  பணிபுரிந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த செலவில் அவரவர் சொந்த ஊர்க ளுக்கு சனியன்று அனுப்பி வைக்கப் பட்டனர். திருப்பூர் பின்னலாடை உற்பத்தி  மையத்தின் துணை நகரமாக அவிநாசி  அருகே நேதாஜி ஆயத்த ஆடைப் பூங்கா  (நியூ திருப்பூர்) உள்ளது. இங்கு 10 -க்கும் மேற்பட்ட பனியன் உற்பத்தி நிறுவனங் கள் செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு  நிறுவனத்திலும் வெளிமாநிலத் தொழிலா ளர்கள் உட்பட 500-க்கும் மேற்பட்ட தொழி லாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். பொது முடக்கம் காரணமாக இந்நிறுவனங் கள் இயங்காததால் பொருளாதார ரீதியாக  பாதிக்கப்பட்ட வெளி மாநிலத் தொழிலா ளர்கள் தங்களை சொந்த ஊர்களுக்கு அனுப் பக்கோரி சில தினங்களுக்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அப்போது காவல்துறையினர் நடத்திய  பேச்சு வார்த்தையில், விரைவில் அவரவர்  சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க  நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக் கப்பட்டது. ஆனால், அதன்பின்னர் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இதனையடுத்து தொழிலாளர்கள் தங்களது சொந்த செலவிலேயே ஊர்களுக்கு செல்வதாக தெரிவித்தனர். இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷா  மித்தல் தலைமையில் அத்தொழிலாளர் களுக்கு சிறப்புப் பயண அட்டை ஏற்பாடு செய்யப்பட்டு பல்வேறு கட்டங்களாக தொழிலாளர்கள் புறப்பட ஏற்பாடு செய் யப்பட்டது. இதனைத்தொடர்ந்து சனியன்று 4 மினி வேன் மற்றும் ஒரு பேருந்தில் சுமார் 90 தொழிலாளர்கள் அவர்களுக்கு சொந்த செலவில் பீகார் மற்றும் ஒரிசா மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.