அவிநாசி, நவ.11- அவிநாசி அருகே தண்டுக்காரன் பாளையத்தில் முறையான சுடுகாடு வசதி இல்லாததால், இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய இயலாமல் தவிக்கும் அவலம் பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. அவிநாசி ஒன்றியம், தண்டுக்கா ரன்பாளையம் ஊராட்சியில் உள்ளது ராமியம்பாளையம். இங்குள்ள அய் யன் காடு ஆதிதிராவிடர் காலனியில் 500 க்கும் மேற்பட்டோர் வசித்து வரு கின்றனர். இப்பகுதியில் வசிப்பவர்க ளுக்கு உரிய மாயன வசதி இல்லாத தால் முறியாண்டாம்பாளையம் ஊராட்சி, சூரிபாளையம் குளத்தங் கரையில் அடக்கம் செய்து வருகின் றனர். மழை காலங்களில் சூரிபா ளையம் குளத்தில் தண்ணீர் தேங்கும் நிலையில் பாதை வசதி இல்லாத தால் தண்ணிரில் இறங்கி சடலத்தை எடுத்து சென்று அடக்கம் செய்ய வேண்டியுள்ளது. இது குறித்து பொதுமக்கள் கூறிய தாவது, எங்கள் பகுதிக்கு மயானம் இல்லாமல் மிகவும் சிரமப்படுகிறோம். மேலும் சூரிபாளையம் மயானம் செல்ல சரியான பாதை வசதி கிடை யாது. இதனால் முழங்கால் அளவு தண்ணீரில் இறங்கி சடலத்துடன் செல்ல வேண்டிய அவலம் பல ஆண்டு களாக நீடிக்கிறது. இந்நிலையில், கடந்த வருடம் ஆதிதிராவிடர் நலத் துறை அலுவலர் சாந்தாதேவி இங்கு ஆய்வு மேற்கொண்டார். மயானமாகப் பயன்படுத்தி வரும் சூரிபாளையம் குளக்கரை பொதுப்பணி துறைக்கு சொந்தமானது. இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்து இதற்கு தீர்வு காணப்படும் என தெரிவித்து சென்றார். ஆனால் ஓராண்டு ஆகியும் இது வரை எங்கள் ஊருக்கு மயானம் ஏற் படுத்தி தரவில்லை என வேதனை யுடன் தெரிவித்தனர்.