tamilnadu

img

அவிநாசி: குடிநீர் கேட்டு பேரூராட்சி அலுவலகம் முற்றுகை

அவிநாசி, அக். 21- குடி தண்ணீர் கேட்டு அவிநாசி பேரூராட்சி அலுவலகத்தை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் திங்களன்று முற்றுகையிட்டு  போராட்டத்தில் ஈடுபட்டனர். அவிநாசி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன.இப்பகுதி யில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டோர் வசித்து வருகின்றனர். கடந்த பத்து நாட்களாக பேரூராட்சி நிர் வாகம் இரண்டாவது குடிநீர் திட்டம் மூலம் இப்பகுதிக்கு குடிநீர் வழங் கப்படவில்லை. இதையடுத்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் பொது மக்கள் மத்தி யில் ஞாயிற்றுக்கிழமை கையெ ழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து அவிநாசி  பேரூ ராட்சி அலுவலகத்தை  அனைத்திந் திய ஜனநாயக மாதர் சங்கம் தலை மையில் பொது மக்கள் திங்ளன்று முற்றுகையிட்டு மனு அளித்தனர்.  இதுகுறித்து துப்புரவு மேற்பார் வையாளர் பாலன் கூறுகையில், மழையின் காரணமாக இரண்டா வது குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் முறையாக விநியோகிக்க முடிய வில்லை. மேலும், குடிநீர் திட்டத் தின் குழாய் உடைப்பு ஏற்பட்டுள் ளது. எனவே, செவ்வாய்க்கிழமை முதல் முறையான குடிநீர் விநியோ கிக்கப்படும் என உறுதி அளித்தார். இதன் பின்பு பொதுமக்களும், மாதர் சங்கத்தினரும் கலைந்து சென்ற னர்.  முன்னதாக இப்போராட்டத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அவிநாசி நிர்வாகிகள் சித்ரா, முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் தேவி, தங்கமணி, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன் றிய செயலாளர் எஸ்.வெங்கடா சலம், ஒன்றியக்குழு உறுப்பினர் கள் கனகராஜ், வேலுச்சாமி, பழனி சாமி, பழங்கரை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பழனிசாமி, ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.