கோவை, மே 31-கோவை மாவட்டத்தில், கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில் பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்திடவேண்டும் என பள்ளி கல்வித் துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். 2018-19 ஆம் கல்வி ஆண்டில்மாணவர் சேர்க்கை மற்றும் பள்ளி உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்துதல் மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்படும் ஆசிரியர் தகுதி (8,9.6.2019) தேர்வினை சிறப்புடன் நடத்திட முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், ஆட்சியர் கு.இராசாமணி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய்அலுவலர் இராமதுரை முருகன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன், பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்ததாவது,பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த சமூகப் பங்களிப்பு நிதியினை தனியார் நிறுவனங்களிடமிருந்து அதிகளவில் பெற அனைத்து கல்வித்துறை பொறுப்பாளர்கள் முழு அளவில் ஈடுபட்டு அடிப்படை வசதிகளை மேம்படுத்தவேண்டும். மேலும், நமக்கு நாமேதிட்டத்தையும் இந்த நோக்கத்திற்கு பயன்படுத்த வேண்டும். இக்கல்வியாண்டில் இடைநிற்றலை முழுமையாகத் தடுத்து 100 சதவிகிதம் மாணவ, மாணவியர்கள் பள்ளிப்படிப்பை தொடர்வதை உறுதி செய்யவேண்டும்.இந்த கல்வியாண்டு முதல்கோவை மாவட்டத்தில் அங்கன்வாடி மையங்கள் இணைந்த 122நடுநிலைப் பள்ளிகளில் எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி வகுப்புகளுக்கு ஒருபள்ளிக்கு தலா இரண்டு ஆசிரியர்கள் வீதம் நியமனம் செய்யப்பட்டு ஜுன் 2019 முதல் செயல்பட உள்ளன. எல்.கே.ஜி வகுப்புகளில் மாணவர் சேர்க்கை குறைந்தபட்சம் 20 என்ற எண்ணிக்கையில் இருப்பதை உறுதி செய்து அதற்கானநடவடிக்கைகளை அனைத்து நிலை அலுவலர்கள் மேற்கொள்ளவேண்டும்.வரும் கல்வியாண்டில் மாணவர் தேர்ச்சி விகிதத்தை அதிகப்படுத்த வேண்டும். மாதம் இருமுறை பள்ளிகளை நேரடியாகப் பார்வையிட்டு கல்வி வளர்ச்சி, பள்ளியின் உட்கட்டமைப்பு, சுகாதாரம் போன்றவற்றை ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது. அனைத்து உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தேர்ச்சி விகிதத்தில் சிறந்த பள்ளி, இவற்றில் முன்னேற்றம் தேவைப்படும் பள்ளி மற்றும் தனித்தன்மை வாய்ந்த பள்ளிகள் என வகைப்படுத்த வேண்டும். இந்த கல்வி ஆண்டில் முதன்மை இடம் பெறபள்ளிக்கல்வித்துறை அலுவலர்,பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவ மாணவியர்கள் உள்ளிட்ட அனைவரும்ஒருங்கிணைந்து செயல்படவேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுரை வழங்கினார்.