tamilnadu

ஆர்எஸ்எஸ் செய்த படுபாதகம்

சபரிமலையில் இளம்பெண்களை அனுமதிக்கும் உச்சநீதிமன்ற தீர்ப்பை முதலில் வரவேற்றவர்களின் பட்டியலில் ஆர்எஸ்எஸ்இடம்பெற்றிருந்தது. சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கப்பட வேண்டும் என்று வலுவாக குரலெழுப்பியதும் ஆர்எஸ்எஸ்தான். தற்போதுவாழும் மூத்த ஆர்எஸ்எஸ் தலைவர்களில் ஒருவரான ஆர்.ஹரியால் எழுதப்பட்டு சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) அதிகார பூர்வவெளியீட்டகமான குருஷேத்திரபிரகாசன் வெளியிட்டுள்ள “மாற்றுவின் சட்டங்களை” (மாற்றுங்கள் சட்டங்களை) என்கிற நூலில் இது சந்தேகத்துக்கு இடமின்றி தெளிவு படுத்தப்பட்டுள்ளது. அதற்கு மேல் கேரளத்தின் மிக மூத்த சங்பரிவார் தலைவர் ஓ.ராஜகோபால் உள்ளிட்டோர் வெளிப்படையாக எடுத்த நிலைப்பாடும் சபரிமலையில் இளம்பெண்களை அனுமதிக்க வேண்டும் என்பதற்கு சாதகமாகவே இருந்தது. சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்கிறகோரிக்கையுடன் உச்சநீதிமன்றத்தை அணுகியதும் ஆர்எஸ்எஸ் தொடர்புடைய பெண்வழக்கறிஞர்கள்தான். இவையெல்லாம் யாருடைய குற்றச்சாட்டும் அல்ல. தெளிவானஉண்மைகளாகும். சபரிமலை தீர்ப்பு வெளியானபிறகு திடீரென நிலைப்பாடைமாற்றினர். தாங்கள் பாரம்பரியவழக்கங்களின் (ஆச்சாரம்) பாதுகாவலர்கள் என்று கூறிக்கொண்டு ஒரு பெண்ணையும் அங்கு நுழையஅனுமதிக்க மாட்டோம் என்றுஅறிவித்து கலவரத்தில் இறங்கியதும் ஆர்எஸ்எஸ்தான். இந்த நிலைப்பாடு மாற்றத்திற்கு பின்னணியில் உள்ள மோசமான-அவமானகரமான சந்தர்ப்பவாதம் அப்போதே சுட்டிக்காட்டப்பட்டது. இடது ஜனநாயக முன்னணி அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவது என்கிற அரசியல்சாசன கடமையை மேற்கொண்டது.அதனை இடதுசாரிகளின் நிர்ப்பந்தமாக சித்தரிக்க முற்பட்டனர். சபரிமலையையும் அங்குள்ள பாரம்பரிய வழக்கங்களை மறுப்பவர்கள் என்றும் எதிர்த்து தகர்க்க முயற்சிப்பவர்கள் இடதுசாரிகள் என்றும் பொய் பிரச்சாரம் நடத்த ஆர்எஸ்எஸ் முயன்றது. பகல்போல்வெட்டவெளிச்சமான உண்மைகள் கண்முன்னால் இருந்த போதிலும்அந்த பொய் பிரச்சாரத்தின் பின்னால் செல்ல காங்கிரசும், யுடிஎப்பும் தயாரானது. சிபிஎம்மையும்இடது ஜனநாயக முன்னணியையும் இறை நம்பிக்கையின் எதிரிகளாக சித்தரித்து தாங்களே இறை நம்பிக்கையின் பாதுகாவலர்கள் என்று நிறுவ முயன்றனர்.

அதற்கு வலதுசாரி ஊடகங்கள் துணை நின்றன.சாதாரண மக்களை திசைதிருப்பி ஓட்டும், ஆதரவும் பெறும் முயற்சியில் சங்பரிவாரும், யுடிஎப்பும் ஒரே விதமாக செயல்பட்டன. ஆனால், மக்களவை தேர்தல் முடிந்து ஓட்டுகள் பெட்டிகளில் ஆன பிறகு ஆர்எஸ்எஸ்-ல் உள்ள சிலர் புதிய கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். மூத்ததலைவர் ஆர்.ஹரி போன்றவர்களின் சபரிமலையில் பெண்கள்செல்வதற்கு ஆதரவான நிலைப்பாடு, பொருளாதார விருப்பங்களை அடிப்படையாக கொண்டது எனவும், அதன் பின்னணியில் நிலமாபியாக்கள் உள்ளதாகவும் சங்பரிவார் அறிவுஜீவிகள் தரப்பிலிருந்து வெளிப்பட்டுள்ளது. பினராயி விஜயனை எதிர்க்கவே தங்களைஉதைபடச் செய்ததாக சபரிமலை போராட்டங்களில் நேரடியாகவும், மறைமுகமாகவும் தலைமை வகித்தவர்கள் சிலர் பகிரங்கமாக பேசியுள்ளனர். தீர்ப்பு வெளியானபோதும் தேர்தல் காலத்திலும் ஜனநாயக விரோதமாக குறுகியஅரசியல் நோக்கம் கொண்ட நிகழ்ச்சி நிரலுடன் யுடிஎப்பும் பாஜகவும் களம் கண்டபோது, அதை ஆதரிக்கவும், செயலூக்கம் அளிக்கவும் கூட்டாக முயன்றஊடகங்கள் சங்பரிவாரின் புதிய சர்ச்சைகளைப்பற்றி அறியாதது போல் நடிக்கின்றன.சபரிமலை பிரச்சனையை எழுப்பி கலவர முயற்சிகளும்,தொடர் கடையடைப்பும் அரசியல்ஆதாயத்துக்கான நடவடிக்கைகள் என்பது அம்பலமாகி உள்ளது.இதுகுறித்து ஆர்எஸ்எஸ்-பாஜகதலைவர்கள் யாரும் பதிலளிக்க முன்வரவில்லை. ஆர்எஸ்எஸ்-இன் தத்துவ முகமும் ‘அகில இந்திய பிரமுக்’ பதவியை பெற்றவருமான ஆர்.ஹரி-க்கு எதிராககடுமையான குற்றச்சாட்டு சங்பரிவாரிடமிருந்தே எழுந்தபோதிலும் சங்கமோ, பரிவார் தலைமையோ பதிலளிக்க தயாரில்லை. இது ‘சங்பரிவார் தொழுவத்தில் குத்து’ என்று சாதாரணமாக ஒதுக்கிதள்ளும் பிரச்சனை அல்ல. குறுகிய அரசியல் லாபத்துக்காக நாட்டையும், பக்தர்களையும் ரத்தக்களரியாக்க கிளம்பியவர்களே தங்களது உள் நோக்கங்களை உரத்து கூறியிருக்கிறார்கள்.சபரிமலையில், துவக்கத்தில் தங்களது ஊழியர்களை மிதிபட வைத்தது பினராயி விஜயனை எதிர்ப்பதற்காக மட்டுமே என்று ‘ரெடி டூ வெய்ட்’ பிரமுகர் கூறியுள்ளார். நாமஜெபத்தின் சிறப்பையும், குடும்ப பெண்களின் மகிமையையும் கூறிக்கொண்டு தெருக்களில் இறங்கியோர் இதற்கு பதிலளித்தாக வேண்டும். அதற்குமேல், ஆர்எஸ்எஸ்-இன்இந்த நடவடிக்கைகளை பின்பற்றி மக்களை ஏமாற்றத் துணிந்த யுடிஎப்புக்கும், துணைநின்ற ஊடகங்களுக்கும் இது ஒரு பாடமாக வேண்டும். தேசாபிமானி தலையங்கம் 11.5.2019