tamilnadu

img

விமான நிலையங்களை தனியாருக்கு தாரைவார்க்க முயற்சி

விமான நிலைய ஊழியர்கள் உண்ணாவிரதம்

கோவை, செப். 26- விமான நிலையங்களை தனி யார்மயமாக்கும் மத்திய பாஜக அரசை கண்டித்து அனைத்து ஊழி யர்களின் கூட்டமைப்பு சார்பில் மூன்று நாட்கள் தொடர் உண்ணா விரதப் போராட்டம் புதனன்று துவங்கியது.  மத்திய பாஜக மோடி அரசு இந்திய விமான நிலையங்கள் ஆணைக் குழுமங்களுக்கு சொந்த மான விமான நிலையங்களை தனி யார்மயமாக்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. ஏற்கனவே அகமதாபாத், லக்னோ, ஜெய்ப்பூர், கௌஹாத்தி, மங்களூரு மற்றும் திருவனந்தபுரம் ஆகிய விமான நிலையங்களை தனியார் மயமாக் கும் நடவடிக்கைகளை தீவிரப்ப டுத்தி வருகிறது. குறிப்பாக, விமா னத்துறைக்கு சிறிதும் தொடர்பே இல்லாத அதானி குழுமம் என்ற நிறு வனத்திற்கு தாரை வார்க்கும் பணி கள் நடைபெற்று வருகின்றன.  இந்நிலையில் அமிர்தசரஸ், புவ னேஸ்வரம், கோயம்புத்தூர், இந் தூர், கோழிக்கோடு, பாட்னா, ராய்ப் பூர், ராஞ்சி, திருச்சிராப்பள்ளி மற் றும் வாரணாசி ஆகிய 10 விமான நிலையங்களை தனியார்மய மாக்கும் முயற்சியை மத்திய அரசு துவக்கியுள்ளது. இதைத் தொடர்ந்து மத்திய அரசை கண் டித்து மூன்று நாட்களுக்கு தொடர் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு விமான நிலைய ஊழியர் கூட்ட மைப்பு அழைப்பு விடுத்தது.  இதன் ஒருபகுதியாக மத்திய அரசை கண் டித்து கோவை விமானநிலைய வளாகத்தில் ஊழியர்கள் கருப்பு பட்டை அணிந்து, மத்திய அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பி னர்.  இதுதொடர்பாக போராட்டத்தில் பங்கேற்ற கோவை விமான நிலைய ஊழியர்களின் கூட்டமைப்பின் ஒருங் கிணைப்பாளர் கோவிந்தராஜ் கூறுகையில், மத்திய அரசு விமான நிலையங்களை தனியார்மயமாக்கும் கொள்கையை நிறுத்தவில்லை என்றால், தொடர் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம். முதல் கட்டமாக தில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் அக்டோபர் 16 ஆம் தேதியன்று போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்தார். இந்த உண் ணாவிரத போராட்டமானது தொடர்ந்து வெள்ளிக்கிழமை வரை நடைபெற உள்ளது.