பொள்ளாச்சி, ஆக.24- பொள்ளாச்சி அடுத்த சமத்தூர் கிராமத்திலுள்ள 11 மற்றும் 12 ம் வகுப்பு பயி லும் மாணவர்களுக்கு தமிழக அரசின் விலை யில்லா மடிக்கணினி வழங் கும் நிகழ்ச்சி சனியன்று சமத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடை பெற்றது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி கல்வி மாவட் டத்திற்கு உட்பட்ட சமத் தூர் பேரூராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி யில் பயிலும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு 264 மாண வர்களுக்கு கால்நடை பராமரிப்புத்துறை அமைச் சர் உடுமலை ராதாகிருஷ் ணன் கலந்துகொண்டு மடிக்கணினியை வழங்கி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பொள் ளாச்சி வருவாய் கோட் டாட்சியர் இரவிக்குமார் மற்றும் சமத்தூர் பேரூ ராட்சி செயல் அலுவலர் ராஜா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.