தருமபுரி, ஜூன் 5-நூறுநாள் வேலைத்திட்டத்தில் வேலை கேட்டு தொப்பம்பட்டி கிராமமக்கள் தருமபுரி மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழியிடம் மனு அளித்தனர்.தருமபுரி மாவட்டம், மொரப்பூர் ஊராட்சி ஒன்றியம், தொப்பம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட தொப்பம்பட்டி கிராமம் உள்ளது. இங்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்டத்தின் கீழ் சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்துவந்தனர். கடந்த ஆண்டு இத்திட்டத்தின் மூலம் வேலை வழங்கப்படவில்லை. இக்கிராம மக்கள் கூலிவேலைசெய்து பிழைப்பு நடத்திவந்த சூழலில். தற்போது நூறுநாள் வேலைத்திட்டத்தில் வேலை வழங்காகததால் இம்மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது.எனவே, தொப்பம்பட்டி கிராமமக்களுக்கு உடனடியாக நூறுநாள் வேலைத்திட்டத்தில் வேலை வழங்கவேண்டும் என வலியுறுத்தி தருமபுரிமாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழியிடம் விவசாயத் தொழிலாளர்கள் மனு அளித்தனர்.