tamilnadu

img

அம்பேத்கர் சிலையை சேதப்படுத்தியவர்களை கைது செய்க

சேலம், ஆக.30-        அம்பேத்கர் சிலையை சேதப்படுத்தி யவர்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில்  கைது செய்ய வலியுறுத்தி சேலத்தில் இந்திய  குடியரசு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் சிலையை  அண்மையில் சமூக விரோதிகள் சேதப் படுத்தினர். இதனைக் கண்டித்து தமிழகம்  முழுவதும் பல்வேறு கட்சிகள் பல்வேறு அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக வெள்ளியன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இந்திய குடியரசு கட்சியின் சார்பில் அம் பேத்கர் சிலையை சேதப்படுத்திய சமூக விரோதிகளை தேசிய பாதுகாப்புச் சட்டத் தில் கைது செய்ய வலியுறுத்தி மாநில துணைத் தலைவர் பாலகிருஷ்ணன் தலை மையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.