பொள்ளாச்சி, நவ.14- பொள்ளாச்சியை அடுத்த ஆதி யூர் அருகே மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட காட்டு யானை அரிசி ராஜாவை, வரகளியாறு கூண்டில் அடைக்க வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். கோவை மாவட்டம், பொள் ளாச்சி அருகே உள்ள நவமலை மற்றும் அர்த்தனாரி பாளையம் கிராமங்களில் கடந்த சில மாதங்க ளாக சுற்றித்திரிந்த காட்டு யானை அரிசி ராஜாவை பிடிக்க வேண்டு மென்று பொதுமக்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தினர். இத னையடுத்து கடந்த திங்களன்று ஆனைமலை புலிகள் காப்பகம் சார்பில் யானையை பிடிக்கும் பணி தொடங்கப்பட்டது. இதற்காக டாப் சிலிப் கோழிகமுத்தி முகாம்களி லிருந்து கும்கி யானைகள் கலீம் மற்றும் பாரி ஆகிய யானைகள் வரவழைக்கப்பட்டன. இதில் கும்கி பாரிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக, அதற்கு பதிலாக புதனன்று கபில்தேவ் என்ற கும்கி யானை வரவழைக்கப் பட்டது. இந்நிலையில் புதனன்று இரவு ஆதியூர் தனியார் தோட்டம் அருகே தென்னந்தோப்புக்குள் இருந்த அரிசி ராஜா என்ற காட்டு யானை குறித்து வனத்துறை வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் மருத்து வக் குழுவுக்கும் தகவல் கொடுக் கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கோவை மாவட்ட வன கால்நடை மருத்துவர் சுகுமார் முதல்கட்டமாக புதனன்று இரவு யானைக்கு மயக்க ஊசியை செலுத்தினார். இதன்பின், இரண் டாம் கட்டமாக வியாழனன்று அதிகாலை 3 மணிக்கு மற்றொரு மயக்க ஊசி செலுத்தப்பட்டது. சிறிது நேரத்தில் கும்கி யானை கலீம் உதவியுடன் காட்டு யானைக்கு கயிறு கட்டப்பட்டு லாரியில் ஏற்றப்பட்டு டாப்ஸ்லிப் அருகே உள்ள வரகளியாறு யானை கள் பயிற்சி முகாமுக்குக் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள் ளது. இங்குகிரால் என கூறப்படும் மரக்கூண்டில் காட்டு யானை அரிசி ராஜா அடைக்கப்படும் என வனத் துறையினர் தெரிவித்தனர்.