tamilnadu

img

கோவை பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியில் தொல்லியல் கருத்தரங்கு

கோவை, ஆக. 8- கல்வெட்டியல் பட்டயப் படிப்பு மற்றும் தமிழ்த்துறையின் சார்பில் தொல்லியல் கருத்தரங்கம் கோவை பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியில் கடந்த ஆக.3,4 தேதிகளில் நடைபெற்றது.  முதல்நாள் நிகழ்வில் கல்லூரிச் செயலர் முனைவர் தி.கண்ணையன் தலைமையுரை யாற்றினார். கல்வெட்டியல் மேனாள் துறைத்தலைவர்(ப.நி) முனைவர் எ.சுப்பராயலு நோக்க உரை ஆற்றினார்.  கடந்த ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட தொல்லியல் பொருட்கள் பற்றிய வரலாற்றுச் செய்திகள் 30ஆவது ஆவணத்தில் வெளியிடப்பட்டன. இவ்விதழ் தமிழகத்தில் இருந்து வெளிவரும் வரலாற்று ஆவணங்களில் முதன்மை இடத்தை வகிக்கின்றது.

இவ்விதழை கழகத்தலைவர் செந்தீ நடராஜன் வெளியிட பொறியாளர் வெங்கடேசன் ரவி பெற்றுக் கொண்டார்.  கௌமாரமடாலயம் சிரவையாதீனம் சீர்வளர்சீர் முனைவர் குமரகுருபர சுவாமிகள், தமிழத்துறைத் தலைவர் முனைவர் சோ.பத்மாவதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.  இரண்டாம் நாளில் கல்லூரி முதல்வர் து.பிருந்தா வாழ்;த்துரை வழங்கி கலந்து கொண்டோர் அனைவருக்கும் சான்றிதழ்களை வழங்கினார்.  இக்கருத்தரங்கில் தொல்லியல் அறிஞர் முனைவர் பூங்குன்றனுக்கு அவரது தொல்லியல் பணியைப் பாராட்டி சிறப்புக் கௌரவம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து முனைவர் வேதா சலம், தொல்லியல் அலுவலர் (ப.நி) தலைமையில் நாணய ஆய்வாளர் ஆறுமுகச் சீதாராமன் “தமி ழகக் காசுகளில் எழுத்துகள்” என்ற தலைப் பிலும் தி.நா.சுப்பிரமணியன் மற்றும் “கோவில் தோற்றம் வளர்ச்சியில் கண்காணிப்பு அதிகார அரசி யல்”என்ற தலைப்பில் பொறியாளர் கோமகன் ஆகி யோர் சொற் பொழிவாற்றினர். முதல் நாள் அமர்வின் இறு தியில் கலை நிகழ்ச்சிகள் நடத் தப்பட்டன.

 இரண்டாம் நாள் காலையில் பேரூர் பட்டீசுவரன் கோயில் கல் வெட்டுகள், சிற்பக்கலைகள் பார்வைக்குக் களப்பணிப் பயணம் மேற்கொள் ளப்பட்டது.  தமிழகம் மற்றும் பிறமாநி லங்களில் இருந்து  350க்கும் மேற்பட்ட பேராளர் கள் இக்கருத்தரங்கில் கலந்து கொண் டனர்.  இக்கருத்தரங் கில் தொல்லியல், கல்வெட்டியல், நாணயவியல், ஓலை ஆவணம், காத்த ஆவணம், பண்டைய மட் பாண்ட ஆவணம் போன்ற அரிய கண்டு பிடிப்புகள் நிகழ்த்தப்பட்டன. 30க்கும் மேற்பட்ட கட்டுரை யாளர்கள் புதிய வரலாற்றை உருவாக்குவதற்கு ஆதாரங்களாக விளங்கும்.  புதிய கண்டுபிடிப்புகளை வெளியிட்டனர்.   தொல்லியல் செயலர் முனைவர் சு.இராசவேலு இரண்டு நாள் கருத்தரங்கத்தைச் செம்மைபடுத்தினார். மூன்று தொல்லியல் வரலாறு சார்ந்த நூல்கள் வெளியிடப்பட்டன. இறுதியில் இணைப்பேராசிரியரும், கல்வெட்டியல் பட்டயப்படிப்புப் பொறுப்பாசிரியரும், இக்கருத்தரங்கின் உள்ளூர்ச் செயலருமாகிய முனைவர் ச.இரவி இக்கருத்தரங்கின் முக்கியத்துவத்தை கூறி நன்றியுரையாற்றினார்.