tamilnadu

img

அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர்களை நியமித்திடுக

சேலம், ஜூன் 3 -ஆத்தூர் அரசு மருத்துவமனையில் கூடுதல்மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என மாதர்சங்கத்தின் ஆத்தூர் தாலுகா மாநாட்டில்தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் ஆத்தூர் தாலுகா மாநாடு திங்களன்று தங்கம்மாள் தலைமையில் நடைபெற்றது. இதில் மாதர் சங்க மாவட்ட செயலாளர் ஐ.ஞானசெளந்தரி சிறப்புரையாற்றினார். இம்மாநாட்டில், ஆத்தூர், வாழப்பாடி, சின்னசேலம் பகுதிகளில் நான்கு வழிச்சாலை அமைக்க வேண்டும். ஆத்தூர் அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என்பனஉள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.முன்னதாக, இம்மாநாட்டில் புதிய தாலூகா தலைவராக தங்கம்மாள், செயலாளராக முனியம்மாள், துணை தலைவராக காசாம்பாள், துணை செயலாளராக ஜி.ஜெகதாம்பாள் உள்ளிட்ட கமிட்டி உறுப்பினர்கள் தேர்வு செய்தனர்.