ஈரோடு, ஜுலை 31- அந்தியூர் குருநாதசாமி கோயில் ஆடிப்பெருந் தேர்த்திருவிழாவிற்கு வரும் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்திட அரசு நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும் என வலியுறுத்தி அனைத்து அரசியல் கட்சிகள் சார்பில் மனு அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக, அந்தியூர் வட்டார வளர்ச்சி அலுவலர், வட்டாட்சியர், காவல் ஆய்வாளர் ஆகியோரிடம் திமுக ஒன்றிய செயலாளர் ஏ.ஜி.வெங்கடாசலம், காங்கி ரஸ் வட்டார தலைவர் அ.ச.நாகராஜ், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் ஆர்.முருகேசன், சிபிஐ தாலுகா துணைச் செயலாளர் பி.அப்புசாமி, மதிமுக மாவட்ட துணைச்செயலாளர் கு.ராமன், விசிக ஒன்றியச் செயலாளர் கு.தங்கராசு ஆகியோர் அளித்த மனுவில் கூறியிருப்ப தாவது, அந்தியூர் குருநாதசாமி கோயில் ஆடிப் பெருந் தேர்த்திருவிழாவிற்கு வரும் லட்சக்கணக்கான பொதுமக்களுக்கும், உள்ளூர் மக்களுக்கும் குடிநீர் வசதியும், கால் நடைகளுக்கு நிறைவான தண்ணீர் வசதி யும் செய்யவேண்டும். திருவிழாவிற்கு வரும் வெளியூர் பொதுமக்கள் குறிப்பாக பெண் கள் இயற்கை உபாதைகளை கழிக்க போது மான தண்ணீர் வசதியுடன் கூடிய பயோ மற்றும் நடமாடும் கழிப்பிட வசதிகள் செய்ய வேண்டும். திருவிழா நடைபெறும் பகுதி களில் சுகாதார நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும். திருவிழா தளத்தில் காவல்துறை கூடுதலான உயர் கண் காணிப்பு கோபுரங்கள் அமைத்து பாது காப்பு ஏற்பாடுகளை செய்யவேண்டும் என அம்மனுக்களில் வலியுறுத்தப்பட்டிருந்தது. மேலும், இக்கோரிக்கைகள் தொடர் பாக ஈரோடு மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயன் ஆகியோருக்கும் மனுக்கள் அனுப்பி வைக் கப்பட்டது.