சேலம், நவ.26- சேலம் சிறுவனுக்கு விபத்தில் துண்டான கையை அறுவை சிகிச்சை மூலம் இணைத்து அரசு மருத்துவர்கள் சாதனை படைத் துள்ளனர். சேலம் மாவட்டம், கந்தம்பட்டி பகுதியில் கடந்த 8 ஆம் தேதி காற்று பிடிக்கும் கம்ப்பிரசர் வெடித்து சிதறியதில் ராமன் - சித்ரா தம்பதியின் 11 வயது மகன் மௌலீஸ்வரனின் கை துண்டா னது. மேலும் சிறுவனின் தொடை எலும்பிலும் முறிவு ஏற்பட்டது. இதையடுத்து விபத்து நடந்த உடனே சிறுவனை பெற்றோர் கள் சேலம் மோகன்குமார மங் கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதையடுத்து உடல் உறுப்பு ஒட்டு அறுவை சிகிச்சை நிபுணர் ராஜேந்திரன் தலைமையில் 20 மருத்துவர்கள் அடங்கிய குழுவி னர் சிறுவனுக்கு துண்டான கையை மீண்டும் இணைக்கும் அறுவை சிகிச்சையை மேற் கொண்டனர். சுமார் 7 மணி நேரம் நடைபெற்ற இந்த அறுவை சிகிச்சை மூலம் சிறுவனின் துண் டான கை மீண்டும் இணைக்கப் பட்டது. மேலும் சிறுவனின் காலில் ஏற்பட்ட தொடை எலும்பு முறிவிற்கும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சை முடிந்து 15 நாட்களை கடந்துள்ள நிலையில், சிறுவனின் உடல்நிலை தற்போது முன்னேறி வருவதாக மருத்துவர்கள் தெரி வித்தனர். சிறுவனுக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்து வர்கள் கூறுகையில், சிறுவனின் கை துண்டான அரை மணி நேரத் திலேயே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டார். மருத்துவர்கள் விரைந்து செயல்பட்டு உடல் உறுப்பு ஒட்டு அறுவை சிகிச்சை, எலும்பு அறுவை சிகிச்சை மற்றும் மயக்க வியல் துறை மருத்துவர்கள் என 20 மருத்துவர்கள் அடங்கிய குழு வினர் சுமார் 7 மணி நேரம் அறுவை சிகிச்சை மூலம் துண்டான கையை இணைத்து உள்ளனர். தற்போது சிறுவனின் உடல்நிலை முன்னேறி வருகிறது. நவீன அறுவை சிகிச்சைக்கு தேவை யான அனைத்து உபகரணங்க ளும் அரசு மருத்துவமனையில் உள்ளதால் பொதுமக்கள் இது போன்ற விபத்து நேரிடும்போது காலம் தாழ்த்தாமல் விரைவாக அரசு மருத்துவமனையை அணுக வேண்டும். விபத்தில் துண்டான உடல் உறுப்புகளை ஐஸ் பாக் ஸில் வைத்து அதிகபட்சம் ஆறு மணி நேரத்திற்குள் மருத்துவ மனைக்கு கொண்டு வரும் பட்சத் தில் நிச்சயமாக உடல் உறுப்பு களை மீண்டும் இணைக்க முடி யும் என மருத்துவர்கள் தெரிவித்த னர். விபத்தில் துண்டான உடல் உறுப்புகளை அறுவை சிகிச் சையை தனியார் மருத்துவமனை யில் மேற்கொண்டால் ரூ.5 முதல் ரூ.6 லட்சம் வரை செலவாகும். இந்த அறுவை சிகிச்சை அரசு மருத்துவமனையில் மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் முற்றிலும் இலவசமாக செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.