tamilnadu

img

குடிநீருக்காக ஐந்தாண்டுகளாக காத்திருக்கும் மேல்நிலை நீர்தேக்க தொட்டி

உடுமலை, ஆக. 30- உடுமலை அருகே கட்டி முடித்து ஐந்தாண்டுகள் ஆன நிலையில்  இன்று வரை குடிநீர் ஏற்றாமல் உள்ளதால் பொது மக்கள்பெரும் அவதிக்குள்ளாகிறார்கள். உடுமலை தாலுகா, பள்ளாபா ளையம் ஊராட்சிக்குட்பட்ட கொங்கலக்குறிச்சி கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங் களில் ஆயிரக்கணக்காண மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த கிரா மத்திற்குத் திருமூர்த்தி அணையில் இருந்து கணக்கம்பாளையம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் கொங்கலங்குறிச்சி கிராமத்தில் இருந்த மேல்நிலை தொட்டியில் தண்ணீர் ஏற்றி பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த ஐந் தாண்டுகளுக்கு முன்பு பழைய மேல் நிலைத்தொட்டியை இடித்து விட்டு கடந்த 2015ஆம் ஆண்டு ரூ.13 லட்சத்து35 ஆயிரம் மதிப் பில் சுமார் ஒரு லட்சம் லிட்டர் கொள் ளளவு கொண்ட புதிய மேல் நிலை தொட்டி கட்டப்பட்டது. கட்டி முடிக்கப்பட்டு சுமார் ஐந்தாண்டு கள் ஆன நிலையில், இன்று வரை குடிநீர் ஏற்றாமல் உள்ளது. இது குறித்து பொது மக்கள் கூறும் போது, எங்களுக்கு நல்ல தண்ணீர் பழைய மேல் நிலை தொட்டியிலிருந்து முறையாக கிடைத்து வந்தது. ஆனால் எந்த முன் நடவடிக்கையும் எடுக்காமல், பழைய மேல் நிலை தொட்டியை இடித்து விட்டு,  புதிய மேல் நிலை தொட்டி கட்டினர். இப்பணிகள் முடிந்து ஐந்து ஆண்டுகளாக தண் ணீர் ஏன் ஏற்ற வில்லை  என்று தெரி யவில்லை என ஆதங்கத்துடன் தெரிவித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் ஒன்றியக்குழு உறுப்பினர் எஸ். ஜெகதீசனிடம் கேட்ட போது, குடி நீர் பற்றாக்குறை ஏற்படுவதை சரி செய்ய திருமூர்த்தி அணை நீரை யும், உள்ளூர் கிணற்று தண்ணீரை கலந்து விநியோகம் செய்வதால் பள்ளபாளையம் மற்றும் கொங் கலக்குறிச்சி மக்களுக்கு உடல் ரீதியான பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது. இது குறித்து பல முறை புகார் சொல்லியும் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலை யில், செப்டம்பர் மாதம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலை மையில் போராட்டம் நடத்த முடிவு செய்து உள்ளோம் என்றார். இது குறித்து குடிநீர் வடிகால் வாரிய உதவி கோட்ட பொறியாளர் ராதகிருஷ்ணனிடம் கேட்ட போது, அக்டோபர் முதல் வாரத்தில் உறுதி யாக மேல் நிலைத்தொட்டியில் தண்ணீர் ஏற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப் படும் என்றார். (ந.நி)