tamilnadu

வால்பாறை அரசு பள்ளியின் மேற்கூரையை சீரமைத்திடுக மாவட்ட ஆட்சியரிடம் சிபிஎம் கோரிக்கை

பொள்ளாச்சி, ஜூலை 25-  வால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் மேற்கூரையினை சீரமைக்க மாவட்ட ஆடசியர் நடவ டிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சியின் வால்பாறை பகுதி செயலாளர் பி.பரமசிவம், மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது: கோவை மாவட் டம், பொள்ளாச்சியை அடுத்த வால்பாறை பகுதியில் பழமை வாய்ந்த அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப் பள்ளியில் ஏராளமானோர் படித்து வந்த நிலையில், கொரோனா ஊரடங்கால் பள்ளி இயங்காமல் இருந்து வரு கிறது.

இந்நிலையில் இப்பள்ளியின் மேற்கூரையை  பல ஆண்டாக சிதிலமடைந்து காணப்படுகிறது. இதன் காரண மாக பள்ளியின் மேற்பரப்பில் மழைநீர் தேங்கி நாளடை வில் இடியும் நிலைமை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, தற் போது உள்ள கொரோனோ ஊரடங்கை பயன்படுத்தி பள்ளி யின் மேற்கூரையினை நகராட்சி உதவி கொண்டு சீரமைக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அம் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

;