tamilnadu

img

நகராட்சியை மறைக்கும் அதிமுக பேனர்கள் அப்புறப்படுத்த சிபிஎம் வலியுறுத்தல்

பொள்ளாச்சி, ஜூலை 20-  பொள்ளாச்சி நகராட்சி நுழைவு வாயி லின் முன்பு அதிமுக விளம்பர பேனர்கள் முழுவதும் ஆக்கிரமித்துள்ளதை அப்புறப் படுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் முறையாக அனுமதி பெற்ற பின்னரே பொது இடங்க ளில் விளம்பர பேனர்கள் வைக்க வேண் டும். குறிப்பாக அரசு அலுவலகங்கள் முன்பு கட்டிடங்களை ஆக்கிரமிப்பு செய்யும் வகை யில் விளம்பர பேனர்கள் வைக்கக்கூடாது என கட்டுப்பாடு விதித்துள்ளது. மேலும் சிக்னல் பகுதியிலிருந்து 150 மீட்டர் தொலை வில் தான் விளம்பர பேனர் வைக்க வேண் டும் எனவும் கூறியுள்ளது.  இந்நிலையில், பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தின் முன்பு அதிமுக முன்னாள் நகராட்சி தலைவருக்கு வாழ்த்துக்கள் தெரி விக்கும் வகையில் நகராட்சி அலுவலகத் தின் நுழைவு வாயில் முன்பு மிகப்பெரிய அளவிளான பேனர்கள் வைக்கப்பட்டுள் ளது. மேலும் நகர் பகுதிகளில் ஆங்காங்கு பல இடங்களில் விளம்பர பேனர்கள் சட்ட விரோதமாக வைக்கப்பட்டுள்ளது. இது மாதிரியான விளம்பர பேனர்களை அகற்றுவது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பொள் ளாச்சி நகராட்சி ஆணையர் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளரிடமும் புகார் தெரிவித்துள்ளனர். அப்போது, இரண் டொரு நாட்களில் அகற்றப்படும் என பொள் ளாச்சி நகராட்சி ஆணையர் கண்ணன் தெரிவித்துள்ளார். எனினும் 10 நாட்க ளுக்கு மேலாகியும் விளம்பர பேனர் அகற் றப்படாமல் உள்ள நிலையில், அதனை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க  வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியின் பொள்ளாச்சி தாலுகாக்குழு வலியுறுத்தி யுள்ளது.