உடுமலை, ஆக. 20- உடுமலை அமராவதி அணையிலிருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு கல்லாபுரம், ராமகுளம் கால்வாய் களில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. உடுமலை அமராவதி அணை மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களிலுள்ள புதிய, பழைய ஆயக்கட்டு பாசனத் தில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் பல்வேறு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அணையிலிருந்து பிரதான கால்வாய் மூலம் 25 ஆயிரத்து 250 ஏக்கர் விளைநிலங்களும், அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனத்தில் கல்லாபுரம், ராமகுளம், குமரலிங் கம், கண்ணாடிப்புத்தூர், சோழமாதேவி, கணியூர்,கடத்தூர், காரத்தொழுவு ஆகிய எட்டு ராஜவாய்க்கால் மூலம் 7 ஆயிரத்து 520 ஏக்கர் நிலங்களும், மேலும் தாராபுரம், அரவக்குறிச்சி, கரூர் தாலுக்காவில் 21ஆயிரத்து 867ஏக்கர் விளைநிலங்களும் பாசன வசதி பெறுகின்றன. இந்நிலையில், புதிய ஆயக்கட்டு பாசனத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலைப்பயிர்களுக்கு உயிர்தண்ணீர் வழங்கும் வகையில், கடந்த 11ஆம் தேதி முதல் வரும் 25 ஆம்தேதி வரை 15 நாட்களுக்கு 570 மில்லியன் கன அடி. நீர் திறந்து விடப்பட்டள்ளது. மேலும், எந்த அறிவிப்பு இல்லாமல் 14ம் தேதி இரவு ஆற்றில் 2 ஆயிரம் கன அடிநீர் திறந்து விடப்பட்டது. ஆனால் பழைய ஆயக்கட்டில் உள்ள கால்வாய்களுக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. இந்நிலையில் 20 ஆம் தேதி அமராவதி அணையிலிருந்து பழைய ஆயக்கட்டு பாசனம் ராமகுளம், கல்லாபுரம் கால்வாய்களில் தலா வினாடிக்கு 25 கன அடிநீர் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அமராவதி அணையின் நீர்மட்டம் 90அடியில் 69.11அடியாகவும், நீர்வரத்து வினாடிக்கு 395 கன அடியாகவும், நீர்வெளியேற்றம் வினாடிக்கு 990 கன அடியாகவும் உள்ளது. அணையின் நீர்இருப்பை பொருத்து பழைய, புதிய ஆயக்கட்டு பாசனத்திற்காக அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். ஆனால் கடந்த சில வருடங்களாக தண்ணீர் திறப்பது குறித்து பாசன விவசாயிகள் கருத்து கேட்கப்படாமல் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தன் னிச்சையாக முடிவெடுத்து, எவ்வித முன் அறிவிப்பின்றி தண்ணீர் திறந்து விடுவதாக விவசாயிகள் குற்றச்சாட்டி யுள்ளனர்.