இளம்பிள்ளை, பிப்.28- இளம்பிள்ளை அருகே இளம்பெண்ணை, கூட்டு வன்புணர்வு செய்து, படு கொலை செய்த சம்பவத்தில் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சேலம் மாவட்டம், இளம் பிள்ளையை அடுத்த தப்பக் குட்டை பிள்ளையார் கோயில் அருகே முகத்தில் ரத்த காயங் களுடன் 30 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் கடந்த புதனன்று பிணமாக கிடந் தார். இது குறித்து மகுடஞ்சாவடி போலீசார் நடத்திய முதல் விசாரணையில்,அவர் கல்லால் தாக்கி கொடூரமாக கொலை செய் யப்பட்டது தெரியவந்தது. மேலும், அப் பெண் தப்பக்குட்டையை அடுத்த பூசாரி காட்டுவளவு பகுதியைச் சேர்ந்த கணவனை இழந்தவர் என்றும், சீரகாபாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அப் பெண்ணின் உடலை பிரேத பரிசோதனை செய்தபோது, அவரை ஒன்றுக்கு மேற் பட்ட நபர்கள் வன்புணர்வில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில், அவரை பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்ததாக மாட்டையாம்பட்டி பகுதியைச் சேர்ந்த பார்த்திபன் (20), தப்பக்குட்டை பகுதியை சேர்ந்த பழனிசாமி (29), ரவி (எ) தர்மலிங்கம் (35) ஆகிய மூவரை போலீ சார் கைது செய்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், கடந்த 25ஆம் தேதியன்று அப்பெண்னை இருசக்கர வாகனத்தில் பார்த்திபன் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட் டுள்ளது. இதில் தப்பக்குட்டை பிள்ளையார் கோயில் அருகே அப்பெண்னை வாக னத்திலிருந்து கீழே தள்ளி விட்டபோது அங்கு கிடந்த கல்லில் தலை மோதியதில் அவர் படுகாயமடைந்து மயக் கத்தில் இருந்துள்ளார். இதனால் அவர் இறந்து விட்டதாக நினைத்து அப் பெண்ணின் செல்போன், பணம் மற்றும் கைப்பையைஎடுத்துக்கொண்டு பார்த்திபன் தப்பிச் சென்றுள்ளார். இந்நிலையில் அவ்வழியாக குடி போதையில் வந்த தப்பக்குட்டை பகுதியை சேர்ந்த பழனிச்சாமி (29), ரவி (எ)தர்ம லிங்கம் (35) ஆகியோர் மயங்கிக் கிடந்த அப்பெண்னை பார்த்ததும் இருவரும் கொடூரமாக கூட்டுக் வன்புணர்வு செய்த தாக தெரியவருகிறது. இதனால் அவர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இதை யடுத்து கைது செய்யப்பட்ட மூவரையும் வெள்ளியன்று காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.