உடுமலை, ஆக. 9- உடுமலை நகரில் பாதாள சாக்கடை திட்ட குழிகளை முறையாக மூடாமல் இருப்பதால் விபத்து ஏற்படும் அபா யம் அதிகரித்துள்ளது. திருப்பூர் மாவட்டம், உடுமலை நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு பாதாள சாக்கடை திட் டம் செயல்படுத்த ரூ.39.46 கோடி, சாலைகள் அமைக்க 17 கோடி என ரூ.56.5 கோடி என்ற மதிப்பில் உடுமலை நகர் பகுதி முழுவதும் என சுமார் 97 கிலோ மீட்டர் தொலை விற்கு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டது. இதனால் நகரில் உள்ள அனைத்து சாலைகளிலும் குழிகள் தோண்டப் பட்டது. பல வருடங்கள் வேலைகள் நடைபெற்றது. பாதாள சாக்கடை திட்ட வேலைகளால் தோண்டப்பட்ட குழியால் பல உயிர் பலிகள் ஏற்பட்ட நிலையில், கடந்த ஆண்டு முதல் பாதாள சாக்கடை திட்டம் செயல்பாட்டிற்கு வந்தது. இந்நிலையில், திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதால், அனைத்து சாலைகளிலும் குழியும், குண்டுமாக காணப்பட்டது. இதனால் வாகனங்கள் செல்ல மிகவும் சிரமம் எற்பட்டது. தற்போது உடுமலை நகர் முழு வதும் பெய்து வரும் மழையால் சாலைகள் முழுவதும் மழை நீர் தேங்கி உள்ளது. பல்வேறு இடங்களில் சாக்கடை அடைப்புகளை சரி செய்ய தோண்டபட்ட குழிகளை மூடாமல் இருப்பதால், வாகன விபத்துகள் ஏற்படும் நிலை உள்ளதை நகராட்சி நிர்வாகம் சரி செய்ய வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது.