tamilnadu

தாறுமாறாக இருசக்கர வாகனம் ஓட்டிய இளைஞர்களால் விபத்து- பல் மருத்துவர் பலி

தாராபுரம்,  ஜூலை 12- தாராபுரம் அருகே இளைஞர்க ளால் தாறுமாறாக இருசக்கர வாக னம் ஓட்டியதால் விபத்து ஏற்பட்டு, பல் மருத்துவர் சம்பவ இடத்திலே பலியா னார்.    தாராபுரம், சின்னப்புத்தூர் சின்னப் பள்ளம் வயல் பகுதியை சேர்ந்தவர் விவசாயி பழனிச்சாமி (52). இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். முத்த மகளுக்கு திருமணமாகிவிட்டது. இரண்டாவது மகள் லாவண்யா (23). இவர் பொள்ளாச்சியில் உள்ள தனி யார் மருத்துவமனையில் பல் மருத்து வராக பணிபுரிந்து வருகிறார். தினந் தோறும் காலை வீட்டிலிருந்து கிளம்பி சத்திரம் வரை பழனிச்சாமி இருசக்கர வாகனத்தில் சென்று பேருந்து மூலம் பொள்ளாச்சி சென்று வருவது வழக் கம். இந்நிலையில் வெள்ளியன்று இரவு பணி முடிந்து பொள்ளாச்சியிலி ருந்து தனது ஊரான சத்திரம் பேருந்து நிறுத்ததில் இறங்கியுள்ளார். மகளை அழைத்துக்கொண்டு பழனிச்சாமி இருசக்கர வாகனத்தில் தாராபுரம் பொள்ளாச்சி சாலையில் சின்னப்பள் ளம் அருகே வந்து கொண்டிருந்த போது, ரெட்டிபாளையத்தை சேர்ந்த  ராஜ்குமார் (32) மற்றும் சரவணன் (31) ஆகியோர் இருசக்கர வாகனத்தில் தாறுமாறாக வந்ததாக தெரிகிறது. அப்போது பழனிச்சாமி இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதி னார். இதில் லாவண்யா சாலையில் தூக்கி வீசப்பட்டார். அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் லாவண்யா தலை மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. பழனிச்சாமிக்கும் காயம் ஏற்பட்டது.  இதையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் இருவரும் தாராபுரம் அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக கொண்டு  வரப்பட்டனர். ஆனால் சிகிச்சையளிக் கும் முன்பே லாவண்யா இறந்து விட் டார். இதுகுறித்து பழனிச்சாமி அளித்த புகாரின்பேரில் தாராபுரம் காவல் துறையினர் ராஜ்குமார் மீது வழக் குப் பதிவு செய்து விசாரணை நடை பெற்று வருகிறது. இச்சம்பவம் தாரா புரம் பகுதியில் சோகத்தை ஏற்படுத் தியுள்ளது.