ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் சிபிஎம் வலியுறுத்தல்
ஈரோடு, மே 20- கொரோனா ஊரடங்கு காலத்தில் மேற் கொள்ளப்படும் நிவாரணப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட்ட செயலாளர் ஆர்.ரகுரா மன் தலைமையில் மாவட்ட ஆட்சி யரிடம் அளிக்கப்பட்ட மனுவில் கூறியி ருப்பதாவது, ஈரோடு மாவட்டத்திற்கு பல்வேறு மாநிலங்களிலிருந்து புலம் பெயர்ந்து வந்த தொழிலாளர்களில் பெரும் பான்மையோனோருக்கு சம்மந்தப்பட்ட நிறுவனங்களால் உரிய ஊதியம் கொடுக் கப்படவில்லை. அரசின் நிவாரண உத வியும் இத்தொழிலாளர்களுக்கு முழுமை யாக சென்றடையவில்லை. இந்நிலையில், தங்களது சொந்த ஊருக்குச் செல்ல வேண் டும் என்ற புலம் பெயர்ந்த தொழிலாளர் கள் சிறப்பு ரயில் மூலம் அனுப்பி வைக் கப்படுவர் என்ற அரசின் அறிவிப்பினை நம்பி 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அவர்களது சொந்த மாநிலங்களுக்குச் செல்ல விண்ணப்பித்து காத்து இருக்கின்ற னர். ஆகவே, இத்தொழிலாளர்களை அவர் களது சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைத்திட விரைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
துப்புரவு தொழிலாளி மரணத்திற்கு நீதி வழங்கு
அந்தியூர் வட்டம், நெரிஞ்சிப்பேட்டை பேரூராட்சியில் தூய்மைப் பணியாளராக கடந்த 15 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வந்தவர் பாலன் (எ) என்.பாலசுப்பிர மணியன்(44). கடந்த 6ஆம் தேதி பணி நேரத்தில் உயிரிழந்துள்ளார். பணிக்கா லத்தில் ஏற்பட்ட இவரது மரணம் பதிவு செய்யப்படவில்லை, உடல் கூராய்வும் செய்யப்படவில்லை. கொரோனா வைரஸ் நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த இவர் கொரோனா தொற்றுக்கு உள்ளா னாரா என்பது பற்றியும் பரிசோதிக் கவில்லை. இதையெல்லாம் செய்ய வேண்டிய பேரூராட்சி நிர்வாகம் கடமை தவறியுள்ளது.மேலும், இறந்துவிட்ட பாலன் உடலை குப்பை வண்டியிலேயே எடுத்துச் செல்லுமாறு செயல் அலுவலர் தெரிவித்துள்ளார். இச்செயல் கடும் குற்ற நடவடிக்கையாகும். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அத்துடன் தமிழக முதல்வர் அறிவித்தபடி பணியின் போது இறந்த தூய்மை பணியா ளர் பாலன் (எ) என்.பாலசுப்பிரமணியன் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்கிடவும், அக்குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர அரசுப் பணி வழங்கிட வேண்டும்.
நலவாரிய நிவாரணங்களை உறுதிப்படுத்து
கொரோனா கால நிவாரண நிதியாக தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர் மற்றும் கட்டுமான நலவாரியங்கள் மூலம் வழங்கப்பட்ட ரூ.2 ஆயிரம், அரிசி, பருப்பு உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் ஆகி யவை பதிவினை புதுப்பிக்காத தொழிலா ளர்களும் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல் மாற்றுத்திறனா ளிகள் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள உறுப்பினர்களுக்கு ரூ.5 ஆயிரம் நிவாரண உதவி வழங்கிட தமிழக அரசிற்கு பரிந்துரை செய்திட கேட்டுக் கொள்கி றோம்.
100 நாள் வேலையை அமலாக்கு
தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பணிகளை அனைத்து ஊராட்சிக ளிலும் மேற்கொள்ள உரிய நடவடிக் கைகளை மேற்கொள்ள வேண்டும். கொரோனா நோய் தடுப்பு பணியில் ஈடுபட் டுள்ள ஊழியர்கள் அனைவருக்கும் குறைந்தபட்ச ஊதியத்திற்கு குறைவின்றி ஊதியம், பாதுகாப்பு கவசங்கள் அனைத் தும் முழுமையாக வழங்க வேண்டும். வேலைக்கு வர இயலாத நிலையில் உள்ள வர்களுக்கு ஊதியம் வழங்குவதையும் உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும். இதேபோல் சத்தியமங்கலம் பகுதியில் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டுள்ள பூ விவசாயத்தை பாதுகாக்கும் வகையில் சம்பங்கி பூ ஒரு கிலோவிற்கு ரூ.50ம், மல்லிகை பூ ஒரு கிலோ விற்கு ரூ.100 என குறைந்தபட்ச ஆதார விலையாக மாவட்ட நிர்வாகம் நிர்ணயிக்க வேண்டும். இவ்வாறு அம்மனுவில் வலியு றுத்தப்பட்டுள்ளது. மேலும், இக்கோரிக் கைகளை நிறைவேற்றக்கோரி மே 24 (ஞாயிறன்று) காலை வீடுகளில், பொது வெளியில் ஊரடங்கு நடைமுறையைப் பின்பற்றி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடை பெறும் எனவும் மனுவில் தெரிவிக்கப்ப ட்டுள்ளது. முன்னதாக, இந்த மனுவினை அளிக்கை யில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கள் ப.மாரிமுத்து, எஸ்.சுப்ரமணியன் மற்றும் நகர செயலாளர் பி.சுந்தர்ராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.