tamilnadu

img

வருவாயின்றி தவிக்கும் பழங்குடியின மக்கள்

மேட்டுப்பாளையம், செப்.9- கோவை மாவட்டம், மேட்டுப் பாளையத்தில் உள்ள பில்லூர் அணை பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பரளிக் காடு சூழல் சுற்றுலா கடந்த ஒரு மாத காலமாக தடை விதிக்கப் பட்டுள்ளதால் இப்பகுதி பழங்குடி யின மக்கள் தங்களது வருவாயை இழந்து தவிப்பிற்குள்ளாகி உள் ளனர். தமிழக கேரள எல்லையோர மலைக்காடுகளின் நடுவே அமைந் துள்ளது பில்லூர் அணை. பசுமை யான இயற்கை சூழலை கொண்ட  பில்லூர் அணையின் நீர்தேக்க பகுதியான பரளிக்காடு என்னுமி டத்தில் வனத்துறை மற்றும் உள் ளூர் பழங்குடியின மக்கள் இணைந்து சூழல் சுற்றுலா நடத்தி  வருகின்றனர். அடர்ந்த காட்டின்  நடுவே பரிசல் பயணம், பழங்குடி யின மக்களின் சத்தான பாரம்பரிய உணவு, வனத்துறையினரின் பாதுகாப்போடு வனத்தினுள் நடைப்பயணம், ஆற்று நீர் குளியல் என நகர வாழ்வில் இருந்து விடு பட்டு ஒரு நாள் முழுவதும் இயற் கையோடு இணைந்திருக்க விரும்புவோர் பலரும் முன்பதிவு செய்து இங்கு ஆர்வமுடன் வரு கின்றனர். மேலும், சூழல் சுற்றுலா நடை பெறும் நாட்களில் இங்கு வரும் 200 க்கும் மேற்பட்ட சுற்றுலா பய ணிகளுக்கு உணவு தயாரித்தல் மற்றும் பயணிகளை அழைத்து கொண்டு பரிசல் ஓட்டும் பணி என  ஐம்பதிற்கும் மேற்பட்ட பழங்குடி யின குடும்பங்கள் இவ்வருவாயை நம்பியே உள்ளன. இந்நிலையில் கடந்த ஒரு மாத காலமாக பில்லூர் அணையின் நீர்பிடிப்பு பகுதிக ளான கேரளக் காடுகள் மற்றும் நீலகிரி மலைக்காடுகளில் பெய் யும் தொடர் மழை காரணமாக ஆணை நிரம்பி வழிவதால் அணையின் பாதுகாப்பு கருதி, அதன் உபரி நீர் பவானியாற்றில்  வெளியேற்றப்பட்டு வருகிறது. அணை அதன் முழு கொள்ளளவை எட்டிநீர்வரத்தும் அதிகரித்த காரணத்தினால் சூழல் சுற்றுலா  நடைபெறும் பகுதியான பரளிக் காடு முழுவதும் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. படகு இல்லப் பகுதி நீருக்குள் மூழ்கி விட்டது. இதனால் கடந்த மாதம் வனத் துறையால் சூழல் சுற்றுலா ரத்து செய்யப்பட்டது. மலைக்காடுகளில் பெய்யும் மழையும், இதனால் ஏற்படும் நீர்வரத்தும் குறையாத காரணத் தினால் தற்போது வரை சூழல் சுற்றுலாவிற்கான தடை நீடிக் கின்றது. ஒரு மாத காலத்திற் கும் மேலாக பரளிக்காடு சூழல் சுற்றுலா ரத்து செய்யப்பட்டுள் ளதால் இதன் வருவாயை நம்பி யுள்ள இப்பகுதி மலைக் கிரா மங்களை சேர்ந்த பழங்குடியின  மக்கள் அவதிக்குள்ளாகியுள்ள னர். வனத்துறையினை சார்ந்து பணியாற்றும் தங்களுக்கு இது போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் மானியம் வழங்கி உதவ வனத்துறை முன்வர வேண் டும் என கோரிக்கை விடுக்கின் றனர். இது குறித்து வனத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்ட போது, “தொடர் மழை காரணமாகவே வேறு வழியின்றி சூழல் சுற்றுலா ரத்து செய்யப்பட் டுள்ளது. நீர்வரத்தின் வேகம் குறையும் பட்சத்தில் வரும் வாரங் களில் மீண்டும் சூழல் சுற்றுலா துவக்கப்படும்” என்றனர்.

;