tamilnadu

img

பெரிச்சிபாளையம் பள்ளியில் அப்துல் கலாம் பிறந்தநாள் விழா

திருப்பூர், அக்.16-  பெரிச்சிபாளையம் மாநகராட்சிப் பள்ளியில் முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜெ அப்துல் கலாம் பிறந்தநாள் விழா இணைந்த கரங்கள் அமைப்பின் மூலம் செவ்வாயன்று நடைபெற்றது. இவ்விழாவில் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் பாலசுப்பிரமணியம் தலைமை ஏற்றார். கிராமக் கல்விக்குழுத் தலைவர் சிவசரண்யா, தெய்வசிகாமணி, ஜீவா ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இதைத்தொடர்ந்து மாணவர்களுக்கு இனிப்புகள் மற்றும் கற்றல் கற்பித்தல் பொருட்கள் வழங்கப்பட்டது. முடிவில் பள்ளியின் ஆசிரியர் ராஜமாணிக்கம் நன்றி கூறினார்.