கோவை, ஆக.18- தொழிலாளர் சட்டங்கள் சீரமைப்பு என்கிற பெயரில் தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிக்கும் நடவடிக் கையை மத்திய அரசு கைவிட வேண் டும் என வலியுறுத்தி பொது தொழி லாளர் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கோவை வடக்கு தாலுகா பொது தொழிலாளர் சங்கம் சிஐடியு வின் ஆறாவது மகாசபை கூட்டம் துடியலூர் சிஐடியு சங்க அலுவலகத்தில் ஞாயி றன்று சங்க தலைவர் என்.சிவரா ஜன் தலைமையில் நடைபெற்றது. கே.வெங்கிடுசாமி வரவேற்புரையாற் றினார். மாநாட்டை துவக்கி வைத்து சிஐடியு வடக்கு பொது தொழிலாளர் சங்க மாவட்ட துணை தலைவர் என்.பாலமூர்த்தி உரையாற்றினார். மாநாட்டை வாழ்த்தி சிஐடியு மாவட்ட பொருளாளர் ஆர்.வேலுசாமி, மாவட்ட துணை தலைவர் எம்.அருணகிரிநாதன் ஆகியோர் உரை யாற்றினர். சங்கத்தின் பொதுசெய லாளர் ஆர்.கேசவமணி, பொருளா ளர் வி.தேவராஜ் ஆகியோர் அறிக் கையை முன்வைத்து பேசினர். முன்னதாக இம்மாநாட்டில், தொழி லாளர் சட்டங்கள் சீரமைப்பு என்கிற பெயரில் தொழிலாளர்களின் உரிமை களைப் பறிக்கும் நடவடிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டும். தொழிலாளர்களின் ஓய்வூதியத்தை ரூ.3 ஆயிரம ஆக உயர்த்திட வேண் டும். பெண்களுக்கான ஓய்வூதியம் ஐம்பது வயதில் வழங்கப்பட வேண் டும். சிறு, குறு தொழில்களை பாது காக்க அந்நிய ஏகபோக தொழில்களை கட்டுப்படுத்தி உள்நாட்டு தொழில் களையும் தொழிலாளர்களையும் பாது காக்க வேண்டும். பால் விலை உயர்வை பொதுமக்கள் தலையில் சுமத்தாதே என்பன உள்ளிட்ட பல் வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறை வேற்றப்பட்டது. இதனையடுத்து சங்கத்தின் புதிய தலைவராக என்.சிவராஜன், பொதுச் செயலாளராக ஆர்.கேசவமணி, பொருளாளராக வி.தேவராஜ் மற்றும் 15 பேர் கொண்ட நிர்வாகக்குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. மாநாட்டை நிறைவு செய்து சிஐடியு மாவட்ட துணை செயலாளர் என்.செல்வராஜ் உரையாற்றினார். முடி வில் சாவித்திரி அம்மாள் நன்றி கூறி னார். மாநாட்டில் ஏராளமானோர் பங்கேற்றனர்.