tamilnadu

கோவை அவிநாசி சாலையில் 9.5 கி.மீ. புதிய மேம்பாலம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்

கோவை, ஆக.31- கோவை அவிநாசி சாலையில் 9.5 கிலோ மீட்டருக்கு புதிய மேம்பாலம் விரைவில் அமைக்கப்படும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரி வித்துள்ளார். கோவை கணபதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் முதல மைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் சனியன்று நடைபெற்றது. இதில், தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். மேலும், பெண்களுக்கு மானியவிலையில் ஸ்கூட்டர், மக ளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன், மாற்றுத் திறனாளிகளுக்கான உபகரண கருவிகள் மற்றும் தையல் இயந்திரங்கள் உட்பட ரூ.5 கோடியே 37 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு வழங்கினார். இதனைத்தொடர்ந்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசுகையில், கோவை 50 ஆண்டுகள் இல்லாத வளர்ச்சியை தற்போது பெற்று  வருகிறது. அனைத்து சாலைக ளும் விரிவாக்கம் செய்யப்பட்டுள் ளன. மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒருபகுதியாக, அவிநாசி சாலை யில் உப்பிலிபாளையம் துவங்கி விமான நிலையம் வரை 9.5 கிலோ மீட்டருக்கு புதிய மேம்பாலம் அமைக் கப்படுகிறது. இதன் மூலம் உப்பிலி பாளையத்தில் இருந்து 5 நிமிடங் களில் விமான நிலையம் சென்று விடலாம்.  இதேபோல், 25 ஆண்டுகளாக இழுபறியில் இருந்து வந்த விமான நிலைய விரிவாக்க திட்டம் தொடர் பாக பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு பிரச்சனை முடிவுக்கு எட்டப்பட்டுள்ளது. மேலும், கோவை அரசு தலைமை மருத்துவ மனையில் அனைத்து வகை சிகிச்சை களும் மேற்கொள்ளும் வகையில் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக, இந்த நிகழ்ச்சியில், கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசா மணி, மாநகராட்சி ஆணையர் ஷ்ரவண்குமார் ஜடாவத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.