கோவை, டிச. 10 – கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு கொசுக்களை ஒழிக்கவும், டெங்கு காய்ச்சலை தடுக்கும் விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் மேற் கொள்ள 800 மாநகராட்சி ஊழியர்கள் பணியில் ஈடு படுத்தப்பட்டுள்ளனர். கோவை மாநகராட்சியில் கொசு ஒழிப்பு பணியா ளர்கள், துப்புரவு பணியாளர்கள் ஆகியோர் வீடு வீடாகச் சென்று கொசுப்புழுக்கள் பரவாமல் இருக்க அபேட் மருத்து களையும், ஆய்வுகளையும் மேற்கொண்டு வருகின்றனர். இதனைத்தொடர்ந்து மாநகராட்சிக்குட்பட்ட 100 வார் டுகளில் வார்டுக்கு 8 பேர் வீதம் 800 மாநகராட்சி பணியா ளர்கள் டெங்கு ஒழிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘இந்த பணியாளர்கள் மாநகராட்சிக்குட்பட்ட வார்டுகளில் உள்ள வீடுகளுக்கு சென்று குடிநீர் தொட்டி, தண்ணீர் தொட்டி, தண்ணீர் தேங்கக் கூடிய வாய்ப்புள்ள இடங்களில் ஆய்வு மேற்கொள்வார்கள். அதன் பின் தண்ணீரில் அபேட் மருத்துகளை ஊற்றுவர்கள். இதைத்தொடர்ந்து டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு சென்று சுற்றி 500 மீட்டர் தூரம் வரை மாஸ் கிளினிங் என சொல் லக்கூடிய சுகாதார பணியில் ஈடுபடுவார்கள், என தெரி வித்தனர்.