திருப்பூர், செப். 13- திருப்பூர் மாவட்டத்தை பசுமை போர்வை போல மாற்றும் வகையில் பயன்தரும் மரக்கன்றுகள் சாகுபடி செய்ய ரூ.54 லட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ள தாக மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 110 விதியின் கீழ் ‘நிலத்தடி நீரை பாதுகாக்கும் பாதுகாவலனாக விளங்கும் ‘பனை மரங்களுக்கு” முதற்கட்டமாக நடப் பாண்டில் 10 கோடி ரூபாய் செலவில் 2.5 கோடி பனை விதைகள், வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறை மூலம் பெற்று விவசாயிகளுக்கு வழங்கப்படும். இப்பணி வருங்காலங்களிலும் தொடர்ந்து செயல்படுத்தப்படும்”என தமிழ்நாடு சட்ட மன்ற பேரவையில் அறிவித்தார்கள். அதன் படி, நடப்பு ஆண்டில் 2 கோடி பனைமர விதைகளை மானாவாரி விவசாயிகளுக்கு இலவசமாக விநியோகம் செய்வதற்காக, ‘நீடித்த மானாவாரி விவசாயத்திற்கான இயக்கத்தின்” கீழ், மாநில அரசு ரூ.8 கோடி நிதி வழங்கி அரசு ஆணை வெளியிட்டு, பனை மர விதைகள் கொள்முதல் பணிகள் துவக்கப்பட்டுள்ளன. ஒரு எக்டர் மானா வாரி நிலத்திற்கு 50 பனை மர விதைகள் வீதம் விநியோகிக்கப்படும். திருப்பூர் மாவட்டத்தில், 9 இலட்சம் பனைமர விதை கள் விநியோகத்திற்காக 36 இலட்சம் ரூபாய் நிதியினை தமிழ்நாடு அரசு ஒதுக்கி யுள்ளது. இதே போல், மானாவாரி நிலங்களை பசுமைப்போர்வை போல மாற்றும் வகை யில், நடப்பாண்டில் எக்டருக்கு ரூ.100 மதிப் புள்ள வாகை, தேக்கு, புளி, வேம்பு, இலுப்பை, மகாகனி, ஈட்டி போன்ற பலன் தரும் மரங்களின் கன்றுகளும் இலவசமாக வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. திருப்பூர் மாவட்டத்தில், 90ஆயிரம் பலன் தரும் மரங்களின் கன்றுகள் விநியோகத் திற்காக 18 இலட்சம் ரூபாய் நிதியினை தமிழ்நாடு அரசு ஒதுக்கியுள்ளது. மானா வாரி விவசாயிகளின் நலனுக்காக மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ள இத்திட்டத் தில் சேர்ந்துள்ள விவசாயிகள் பனை மற் றும் இதர பயன்தரும் மரக்கன்றுகளைப் பெற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள் ளப்படுகிறார்கள்.