ஏற்காடு, செப்.28- கள்ளக்குறிச்சியை சேர்ந்த வாலிபர்கள் 25 பேர், வேனில் ஏற்காட்டிற்கு சுற்றுலா வந்துள்ளனர். இந்த வேனை நீலகண்டன் (35) என்பவர் ஓட்டியுள்ளார். இவர்கள் சுற்றுலாவை முடித்துவிட்டு சேலம் நோக்கி புறப்பட் டுள்ளனர். இந்நிலையில், மலைப்பாதையின் 16 ஆவது கொண்டை ஊசி வளைவு பகுதியில் சென்றபோது, வேன் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பக்கவாட்டில் சாய்ந்தது. இந்த விபத்தில் வேனில் இருந்த 5 பேருக்கு காயம் ஏற்பட்டது. இவர்களை அருகிலுள்ளவர்கள் மீட்டு ஏற் காடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.