tamilnadu

img

கோவையில் 5 மாத சிசு சடலமாக மீட்பு: காவல் துறையினர் விசாரணை

கோவை, ஜூன் 29- கோவையில் 5 மாத குறைபிரசவத்தில் பிறந்த சிசுவின் சடலம் காகிதத்தில் சுற்றப் பட்டு வீசப்பட்டது குறித்து போத்தனூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்ற னர். கோவை வெள்ளளூர் பகுதியிலுள்ள குடிசைமாற்றுவாரிய குடியிருப்புக்கு பின்பகு தியில் ஆள் நடமாட்டமற்ற புதர்மண்டிய பகுதி கள் உள்ளது. இந்நிலையில். இப்பகுதியில் திங்களன்று காலை இறந்த நிலையில் ஆண் சிசு ஒன்றின் சடலம் காகிதத்தில் சுற்றி வீசப் பட்டிருப்பதாக அப்பகுதியினர் போத்த னூர் காவல் நிலையத்திற்கு தகவலளித்தனர். அத்தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், சம்பவ இடத் தில் கிடந்த சிசுவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவ இடத்தில் கிடந்த பை மற்றும் துணி ஒன்றை கைப்பற்றிய போத்தனூர் காவல் துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து ஆண் சிசுவை வீசி சென்றவர்கள் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.