tamilnadu

img

பில்லூர் அணையில் இருந்து வினாடிக்கு 20 ஆயிரம் கன அடி உபரிநீர் வெளியேற்றம்

மேட்டுப்பாளையம், ஆக.7- பில்லூர் அணையில் இருந்து வினாடிக்கு 20 ஆயிரம் கன அடி உபரிநீர் வெளியேற்றப் படுவதால் பவானியாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட் டுள்ளது. கோவை மாவட்டம், மேட்டுப் பாளையத்தில் உள்ள பில்லூர் அணையின் நீர்மட்ட உயரம்  100 அடியாகும். தமிழக – கேரள எல்லையில் அடர்ந்த மலைக் காட்டின் நடுவே அமைந்துள்ள இந்த அணைக்கு நீலகிரி மற்றும் கேரளப்பகுதி மலைக்காடுகளே நீர்ப்பிடிப்பு பகுதிகளாகும். இங்கு பெய்யும் மழையே பில்லூர் அணையின் நீராதாரமாக உள்ளது. இந்நிலையில், கடந்த ஐந்து நாட்களாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக பில்லூர் அணைக்கான நீர்வ ரத்து படிப்படியாக அதிகரித்த படி இருந்தது. ஆக.5 ம் தேதி  அணையின் நீர்வரத்து வினா டிக்கு16 ஆயிரம் கன அடியாக உயர்ந்த காரணத்தினால் அணை யின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளவை எட்டி நிரம்பியது.

இதனையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி அதன் உபரி நீர் வெளியேற்றப்பட்டது. அணை யின் நீர்வரத்தான வினாடிக்கு 16 ஆயிரம் கன அடி நீர் அப் படியே பவானியாற்றில் திறந்து விடப்பட்டது. அணையின் நான்கு  மதகுகளும் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்ட தால் பவானியாற்றில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனையடுத்து கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் உடனடியாக மேட்டுப்பாளையம், சிறுமுகை பகுதிகளில் உள்ள பவானியாற்று கரையோரப்பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.  ஆற்றின் கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்போர் மேடான பகுதிகளுக்கு செல்ல வும், ஆற்றில் இறங்கி குளிப் பதோ, மீன் பிடிக்க முயற்சிப் பதோ, பரிசல் ஓட்டுவதோ கூடாது என அறிவிக்கப்பட்டது. செவ்வா யன்று காலை அணைக்கான நீர் வரத்து ஓரளவு குறைந்த நிலை யில் அணையின் மதகுகள் மூடப்பட்டு தண்ணீர் வெளியேற் றம் நிறுத்தப்பட்டது. ஆனால் தொடர்மழை காரணமாக செவ் வாயன்று இரவு மீண்டும் பில்லூர் அணை நிரம்பியதால் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. புதனன்று காலை அணைக்கான நீர்வரத்து வினா டிக்கு 20 ஆயிரம் கன அடியாக இருந்த காரணத்தினால் இது அப்படியே உபரி நீராக தற் போது பவானியாற்றில் வெளி யேற்றப்பட்டு வருகிறது. இதனால் ஆற்றின் வேகம் அதிகரித்து வெள்ளம் கரைபுரண் டோடி வருகிறது. பில்லூர் அணை யில் இருந்து தொடர்ச்சியாக வினாடிக்கு 16 ஆயிரம் முதல் 20  ஆயிரம் கன அடி வரை தண்ணீர்  திறந்து விடப்பட்டு வருவதால் மூன்றாவது நாளாக பவானியாற் றில் வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்கிறது. பில்லூர் அணை யில் இருந்து பவானியாற்றில் திறந்து விடப்படும் 20 ஆயிரம் கன அடி நீர் மற்றும் பவானியின் கிளை ஆறான மாயாற்றில் இருந்து வினாடிக்கு 14 ஆயிரம் கன அடி என மொத்தம் 34 ஆயி ரம் கனஅடி நீர் அப்படியே ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி சாகர் அணையை சென்றடை வதால் இதன் நீர்மட்டமும் வெகு வேகமாக உயர்ந்து வருகிறது. கோவை, திருப்பூர், ஈரோடு என மூன்று மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் பாசன ஆதாரமாக உள்ள பில்லூர் அணை கடந்த மூன்று நாட்களாக நிரம்பி வழி வது இப்பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.