tamilnadu

img

திருப்பூரில் ஜூலை 26 - 29 வரை 15 ஆவது கன்ஸ்ட்ரோ மெகா 2019 கண்காட்சி`

திருப்பூர், ஜூலை 23 - திருப்பூர் கட்டடப் பொறியாளர்கள் சங்கம் சார்பில் ஜூலை 26 ஆம் தேதி முதல் 29ஆம் தேதி முடிய நான்கு நாட்கள் 15 ஆவது கன்ஸ்ட்ரோ மெகா  2019 கண்காட்சி நடத்தப் படுகிறது. இது தொடர்பாக கன்ஸ்ட்ரோ மெகா கண் காட்சித் தலைவர் பொறி யாளர் கே.அருண் செவ்வா யன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருப்பூர் தாராபுரம் சாலை வித்யா கார்த்தி  திருமண மண்டபத்தில் 15ஆவது கன்ஸ்ட்ரோ மெகா கட்டுமானப் பொருட் கள் கண்காட்சி நடத்தப்படுகிறது. மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி தொடக்கி வைக்கிறார். திருப்பூர் தெற்கு எம்எல்ஏ சு.குணசேகரன் கண்காட்சி மலரை  வெளியிட, கட்டுமான சங்க மாநிலத் துணைத் தலைவர் பொறியாளர் பி.ராகவன்  அதைப் பெற்றுக் கொள்கிறார். இதில் மொத்தம் 200 அரங்குகள் முற்றிலும் குளிரூட்டப்பட்ட வசதியுடன் அமைக்கப்படுகின்றன. கட்டட கட்டு மானத்திற்குத் தேவையான சிமெண்ட், கம்பி, செங்கல், ஆர்எம்சி காங்கிரீட், கதவு,  ஜன்னல், கிரானைட், டைல்ஸ், மின் சாதனப் பொருட்கள், பிளம்பிங் பொருட்கள், குளியலறைப் பொருட்கள், சூரிய சக்தியில் இயங்கும் கட்டிட சாதனங்கள், சமையலறை அலங்காரம், உட்புற, வெளிப்புற அலங்காரம், பெயிண்ட் ஆகியவற்றின் தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள் ஒரே கூரையின் கீழ் இங்கு பங்கேற்கின்றனர். கட்டடம் கட்டும் மக்கள் தங்களுக்குத் தேவையான அத்தனை பொருட்களையும் ஒரே இடத்தில் தேர்வு செய்வதற்கு ஒரு பால மாக இந்த கண்காட்சி இருக்கிறது. மாநக ராட்சியுடன் இணைந்து மழைநீர் சேகரிப்பு  விழிப்புணர்வுக்காக தனி அரங்கு அமைக் கப்படுகிறது. கண்காட்சி நடைபெறும் நாட்களில் தினமும் மாலை அரிமா சங்கங்களுடன் இணைந்து வர்மா, அக்குபஞ்சர், சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோ, யுனானி மருத்துவ சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கப்படுகிறது. இலவச மரக்கன்றுகள் வழங்கப்படுகிறது. ஸ்மார்ட் சிட்டி ரோட்டரி சங்கம், ரேவதி மெடிக்கல், அஸ்விகா  மருத்துவமனை இணைந்து 26 முதல் 28 வரை மூன்று நாட்கள் இலவச மருத்துவ பரி சோதனை முகாம் நடத்தப்படுகிறது. 26 ஆம் தேதி செயற்கை கால் வழங்கும் நிகழ்ச்சி  நடைபெறும். மேலும்வேலா இளங்கோ குழுவி னரின் நாட்டுப்புற கலை நிகழ்ச்சி, பொறி யாளர் குழந்தைகளின் கலை நிகழ்ச்சி, தபஸ்யாமிர்தம் பாரம்பரிய நடனப் பள்ளியின் பரதநாட்டிய கலைநிகழ்ச்சி ஆகியவையும் மாலை நேர நிகழ்வுகளாக நடைபெறும். பொது மக்கள் இக்கண்காட்சியை இலவசமாக பார்வையிடலாம். பொறி யியல் மாணவர்களும் இக்கண்காட்சியைக் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக இந்த சந்திப்பின்போது, சங்கத் தலைவர் சிவன் பாலசுப்பிர மணியம், செயலாளர் சௌ.ஸ்டாலின் பாரதி, பொருளாளர் ஜார்ஜ் லியோ  ஆனந்த், கண்காட்சி பொருளாளர் கே. ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந் தனர். முடிவில் கண்காட்சி செயலாளர் எம். துரைசாமி நன்றி கூறினார்.